New Trend Tamil

Browse all latest informations

Thursday, November 23, 2023

நீண்ட நாள் சளியை குணப்படுத்தம் ஆயுர்வேத மருந்து !

 




அதிக அளவில் சீற்றமடைந்த கபம் மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் பகுதியில் சேரும்போது அடைப்பை ஏற்படுத்துகிறது.மூச்சு சீராகச் சென்றுவர முடியாமல் இருப்பதால் நாம் வேக வேகமாக மூச்சை இழுத்து விடுகிறோம்.நீங்கள் முக்கியமாக கபத்தைச் சீற்றமடையச் செய்யும் உணவையும்,செயல்பாடுகளையும் தவிர்ப்பது நல்லது.
கபம் சீற்றமடையாமல் இருக்க செயக்கூடாதவை :
பகலில் உறங்குதல், உடற்பயிற்சி செய்யாமை,உடலுழைப்பு இன்மை,இனிப்பு, புளிப்பு, உவர்ப்புச் சுவைகள் உள்ள பொருள்களை அதிகமாக உட்கொள்ளுதல், குளிர்ச்சி, எளிதில் செரிக்காத உணவு, சம்பா அரிசி, உளுந்து, கோதுமை, எள்ளு, அரிசி போன்றவை மாவினால் செய்யப்படும் தின்பண்டங்கள், தயிர், பால், கரும்புச் சாறு, நீர் மற்றும் நீர்ப்பாங்கான இடங்களில் வசிக்கும் விலங்குகளின் இறைச்சி, சுரைக்காய், பூசணி போன்ற கொடிகளில் காய்க்கும் காய்கறி வகைகள், உண்ட உணவு செரிமானடையும் முன் மீண்டும் உண்பது ஆகியவை கபத்தைச் சீற்றமடையச் செய்யும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கபம் சீற்றமடையாமல் இருக்க செய்யவேண்டியவை :
தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் சளி கட்டாதிருக்க கசப்பு, காரம், துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகள் சாப்பிட நல்லது. தினமும் உடல் சக்திக்கு தகுந்தவாறு உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் செய்வது அவசியம். உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தான்யங்கள் சாப்பிட உகந்தது. அரிசியை உணவாக மிதமாகச் சேர்க்கலாம்.


சுக்கு, மிளகு,கண்டந்திப்பிலி சேர்த்துக் காரமாய் உள்ள ரஸம் சாதம் சாப்பிட நெஞ்சுக் கூட்டில் படிந்திருக்கும் சளி இளகி மூச்சு சீராகச் செல்ல வழியை ஏற்படுத்தித் தரும். இதனால் இளகிய சளியை வெளியே கொண்டுவர வசம்பு, கடுகு, இந்துப்பு இவற்றை சம அளவு சூர்ணம் செய்து சிறிதளவு வெந்நீருடன் கலக்கி சாப்பிட்டு, மேலும் வெந்நீர் நிறைய குடிக்கவும். உடனே வாந்தி வரும். கபம் வெளியே வந்துவிடும். பிறகு மஞ்சள், ஓமம் இரண்டையும் தூளாக்கி துணித்திரியில் சுற்றிக் கொளுத்தி வரும் புகையை மூக்கினாலும் வாயினாலும் உறிஞ்சவும். நீலகிரித் தைலத்தை கொதிக்கிற வெந்நீரில் ஊற்றி ஆவி முகத்திலும் தலையிலும் படும்படியாக வேது பிடிக்கவும்.

ஆயுர்வேத மருந்து :
ஆயுர்வேத மருந்துகளில் தசமூலகடுத்ரியாதி கஷாயம் 3 ஸ்பூன் , 60 மி.லி கொதித்து ஆறிய தண்ணீர், கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 1 மாத்திரை சுவாஸனந்தத்துடன் வெறும் வயிற்றில் சாப்பிடவும். வாஸாரிஷபம் 15 மிலி+ தசமூலாரிஷ்டம் 15 மிலி + 1 வில்வாதி மாத்திரையை அரைத்து அதனுடன் கலந்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். இரவில் படுக்கும் முன்பாக 5 கிராம் அகஸ்திய ரஸாயனம் எனும் லேகியத்தை நக்கிச் சாப்பிடவும். 48 நாட்கள் வரை இம்மருந்தை சாப்பிடலாம்.

கணினியில் அழிய (DELETE ) மறுக்கும் பைல்களை அழிக்க வேண்டுமா ?



நம்முடைய வாழ்வில் கணினி பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அத்தகைய நேரங்களில் கணினியில் உள்ள சில தரவுகளை அழிக்க நினைக்குமோபோது நமக்கு தொல்லை என்னவெனில் அழிக்க நினைக்கும் ஒருசில files delete  ஆகாமல் error காட்டும். அத்தகைய நேரத்தில் நாம் சில SOFTWERE  உதவி நாட வேண்டி உள்ளது . அதை இப்போது காணலாம். 

அதாவது நம் கணினியில் ஏதேனும் ஓர் பைலையோ அல்லது போல்டரையோ அழிக்க முயன்றால், நம்மால் அந்த வேலையை மேற்கொள்ள முடியாது. ஏதேனும் ஓர் பிழை செய்தி தெரிவிக்கப்படும்.


உதாரணமாக நீங்கள் ஓர் பைலை அழிக்க முயன்றால், இந்த பைல் ஆனது வேறோரு பயணளார் பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என செய்தி கிடைக்கும், இதை கேட்டு தாங்கள் குழம்பலாம், நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையே இருப்பினும் ஏன் இச்செய்தி வருகிறது என நினைக்கலாம்.

இந்த மாதிரி அழிய மறுக்கும் பைல்கள் தங்களின் ஹார்டிஸ்க்கில் அதிக கொள்ளளவை எடுத்து கொள்ளும் . இந்த மாதிரியை இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர்க்கொள்வது. இதற்கு தான் ஓர் அருமையான மென்பொருள் உள்ளது. இதில் தங்களின் கணினியில் அழிய மறுக்கும் பைல்களை அல்லது போல்டரை தேர்ந்தெடுத்து பின்னர் அழிக்க என்னும் முறையை தேர்ந்தெடுத்தால். அந்த பைல் அழிக்கப்படும்.
இந்த மென்பொருளின் பெயர்: NTFS UNDELETE



நான் கீழ குடுத்த லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து ஓபன் செய்யவும்., பின்பு ஓபன் ஆனா உடன் எந்த OCAL dISK இல் உள்ள fILES அழிய வில்லையோ அதை SELECT செய்து RUN செய்து பாருங்கள் . இப்போது எல்லாம் CLEAR FILES ஆகும்.

Download this Software பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

NTFSUndelete.com | Download NTFS Undelete

கற்றாழை ஒரு சிறந்த மருத்துவர் !!!

 

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை... பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.
 கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
 கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.
 சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
 தாம்பத்திய உறவு மேம்பட
 சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
 கூந்தல் வளர
 சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
 கண்களில் அடிபட்டால்
 கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
 குளிர்ச்சி தரும் குளியலுக்கு
 மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
 முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
 ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
 இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
 தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
 பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
 கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
 கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
 தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
 நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
 சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
 இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்

(Excel data ) எக்செல் தரவை பட கோப்பாக (Image Format) மாற்றுவது எப்படி ?

 


இன்று நாம் பார்க்க போவது என்னவென்றால் MS Excel  இல் எப்படி Photo எடுப்பது என்று. என்னது Photoவா Excel லா நம்ப முடியல்லயே . நம்பணும் நம்பித்தான் ஆகனும் இது உங்கள் கடமை பீலாவுடறத நிப்பாட்டு சரி விசயத்திற்கு வா என்று சொல்வது விளங்குது சரி சரி விடுங்கப்பா விடுங்கப்பா.சரி விசயத்திற்கு வருவோம் நாம் பொதுவாகExcel இல் உள்ளதை ஒரு Image File  ஆக மாற்றுவதற்கு  வேறு வேறு நடவடிக்கைகள் எடுப்போம்அதை விட நான் சொல்ல இருப்பது மிக இலகுவான முறை பற்றி ஆகும். இனி நடவடிக்கைக்குள் இறங்குவோம்.

 MS Excel முதலில் Open செய்க. 

பிறகு உங்கள் File  இல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் அவற்றை Select  செய்யுங்கள் பின் நமக்கு தேவைப்படும் data Copy முதலில் select  செய்து கொண்டு , பின்பு excel லில்  எங்கு தேவை படுகிறதோ அங்கு எஸ்ஸ்ல் home கிளிக் அதில் பேஸ்ட் (paste ) என்னும் உள்ளீடு கீழே இதர பேஸ்ட் (Paste ) formats options picture  என்னும் கீயை அழுத்தவும் . இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்து கோப்பி (Copy ) செய்தது, Picture ஆக இன்னொரு இடத்தில் வரும். .......

உலகத்தில் சிறந்தது தாய்மைதான் !!



ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப் பெண்மனி சிட்னி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27 வாரங்களே ஆன நிலையில். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண், ஒரு பெண். இரு குழந்தைகளையும் காக்க மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.


பெண் குழந்தை உயிரபிழைத்தது. ஆனால்..  மருத்துவர்கள் கடைசி வரை போராடியும் ஆண்

குழந்தையைக் காப்பாற்ற  முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப்பட்டது.


அதைத் தாங்கிக் கொள்ள முடியாத..  அந்தத் தாய்.. இறந்த குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டார்.


தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன் உடலுடன் குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார். அப்போது.. குழந்தை மெதுவாக மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார். உடன் மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட ஆரம்பித்ததைக் கூறினார்.


மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து.. இங்குபேட்டரில் வைத்து.. சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் கண் விழித்தது குழந்தை..


அதைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட தாயின் விரல்களை குழந்தை பிடித்துக் கொண்டது.


இறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது எது..

ஆம்..


அந்த தாயின் அரவணைப்பு..


இப்போது சொல்லுங்கள், உலகத்தில் சிறந்தது தாய்மைதானே...

டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்கலாம்?


 


கண்காணிப்பது வேறு
… கண்மூடித்தனமான நம்பிக்கை வேறு… பிள்ளைகளின் மேல் பெற்றோருக்கு நம்பிக்கை இருப்பது நல்ல விஷயம் தான்.  ஆனால், அந்த நம்பிக்கை, பிள்ளைகளின் எந்த நடவடிக்கைகளையும் கண்காணிக்க விடாமல் செய்கிற அளவுக்குக் கண் மூடித்தனமானதாக இருக்கக்  கூடாது!
உங்கள் வளரிளம் பருவத்தைப் பற்றி சற்று நினைத்துப் பாருங்கள். அப்பருவத்தில் உங்களுக்குள் பாலுணர்வினால் உண்டான உடல் மற்றும் மன  கொந்தளிப்புகளைப் பற்றி சிந்தியுங்கள். அப்போதைய சூழலுக்கு அந்த உணர்ச்சிகளை அடக்கி ஆள்வது அவசியமாக இருந்திருக்கும்.
இதுவோ  செல்போன், ஃபேஸ்புக், பப் (றிuதீ) மற்றும் பாப் (றிஷீஜீ) கலாசாரத்தில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயம்.
இன்றைய வளரிளம் பருவத்தினரிடையே ‘டேட்டிங்’  கலாசாரம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பரவி வருகிறது. இது பெரிய நகரங்களில் மட்டும் அல்லாது சிறு நகரங்களிலும் சகஜமாகி  வருகிறது.
‘டீன் ஏஜ்ல இதெல்லாம் சகஜம். வயசாக ஆக எல்லாம் சரியாகிடும்’ என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள் இன்று மற்ற  பாலினத்தாருடன் மேற்கொள்ளும் உறவுகளே நாளை அவர்களின் உறவுகள் நலமாக உருவாகுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.  இந்த  நேரத்தில் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுடன் டேட்டிங் பற்றி கலந்தாலோசிப்பது அவசியம். அப்படிச் செய்யும்போது அவர்கள் கருத்துக்கு மதிப்பு  கொடுத்தபடி அதே நேரம் டேட்டிங் பற்றிய உங்கள் கொள்கைகளையும், அவற்றின் அடிப்படைகளையும் நாசூக்காக எடுத்துச் சொல்வதும் அவசியம்.
அந்த உரையாடலின் போது, ‘இதுதான் உங்கள் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்’ என்று கோட்பாடுகள்  அமைத்தீர்களேயானால், உங்கள் பிள்ளைகள் அதை மீறத்தான்  நினைப்பார்கள். மாறாக அவர்களுடைய குறிக்கோள்களுக்கும், எதிர்காலத்துக்கும் எது  நல்லது, எது உதவாது என்று அவர்களே உணரும்படி எடுத்துக்கூறுங்கள்.
சரி… பேச்சை எப்படி ஆரம்பிப்பது? இதுதானே உங்கள் குழப்பம்?
அந்த நேரம் செய்திகளில் அடிபடும் பிரபலங்களின் வாழ்க்கைச் சிக்கல்களை முன்வைத்தே இதைப் பற்றிய உரையாடலைத் தொடங்கலாம்.  பிரபலங்களின் வாழ்க்கைப் பிரச்னைகளில் இருந்து என்ன பாடங்கள் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி பேசலாம். பிரபலங்களின் உறவுகளில் எவை  நலமானவை, எவை நலமற்றவை என்பதை எடுத்துரைத்தீர்களேயானால் அது ஒரு லெக்சராக இல்லாமல்  சுவாரஸ்யமான உரையாடலாக அமையும்.
இதுதான் நம் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வெளிப்படையாக எடுத்துச்  சொல்வதற்கு மாறாக, குறிப்பிட்ட அந்த பிரபலத்தின் வாழ்க்கை, சிக்கலில் முடியாமலிருக்க அவர்கள் தம் டீன் ஏஜ் பருவத்தில் எப்படியெல்லாம்  நடந்து கொண்டிருக்கலாம் என்று டிஸ்கஸ் செய்தால் விதிமுறைகள் நாசூக்காக உள்ளேறும்.
பிறகு உங்கள் கட்டுப்பாடுகளை ஒப்பந்த நோக்குடன் எடுத்துச் சொல்லி, உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம்.
 
உதாரணத்துக்கு, உங்கள் பெண் ஒரு பார்ட்டிக்கு சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பும் திட்டத்துடன் இருக்கிறாள் என வைத்துக் கொள்வோம்.  முதலில் பார்ட்டி நடக்கும் இடத்துக்கு நீங்களோ வேறு பொறுப்பான நபரோ அவளை கூட்டிச் சென்று அங்கு நம்பகமான, பொறுப்பான நபரிடம்  ஒப்படைக்க ஒப்பந்தம் பேசலாம். அந்த நபர், உங்கள் பெண் பொறுப்புடன் நடந்து கொள்வதை கண்
காணிக்கக்கூடிய ஆண்மகனாகவும் இருக்கலாம்.
பிறகு 8 மணிக்கு நீங்களோ, வேறு நம்பகமான நபரோ சென்று அவளை தெரிந்த நபரிடமிருந்து அழைத்து  வர, அவளுடன் ஒன்று சேர்ந்து  முடிவெடுக்கலாம். அதை விட்டு விட்டு ‘பார்ட்டிக்கு செல்லக்கூடாது, ஆண் பிள்ளைகளுடன்  நட்பு கூடாது, 8 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும்’  என்று நீங்கள் கட்டுப்பாடுகளை விதித்தால் உங்கள் பிள்ளையிடம் உங்களுக்கு உள்ள உறவு முறிவதுடன், அவள் உங்கள் பேச்சை மீறுவதற்கும்  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள் என அர்த்தம். தவிர அவள், தன் நடவடிக்கைகளை உங்களிடமிருந்து மறைக்கவும் துணிவாள்.
அவளுடன்  சேர்ந்து முடிவெடுப்பதால் அவள் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது என்ற உணர்வு ஏற்படுவதுடன், அந்த முடிவுக்கு அவளும் பொறுப்பு  என்ற உணர்ச்சியை உண்டாகும். அதோடு, உங்கள் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் கூடி, உங்கள் இருவருக்குமான பந்தம்  பலப்படுத்தப்படும். “சரி, என்னுடைய பிள்ளை செக்ஸ் சிந்தனையில் ஈடுபட மாட்டாள் என்று எப்படி உறுதிப்படுத்தலாம்’’ என்று கேட்டீர்களேயானால்  அதற்கு ஒரே பதில் – ‘முடியாது’.
அவள் அவ்வித சிந்தனைக்கு ஆளானாலும் பொறுப்புடன் நடந்து கொள்வாள் என்ற நம்பிக்கையைதான் வளர்க்க முடியும். அது, நீங்கள் அவளுடன்  செக்ஸ் பற்றி எவ்வாறு பேசியிருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.  இன்று 10 வயது பிள்ளைகளே செக்ஸ் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  அதனல் டி.வியில் ஆபாசக் காட்சிகள் வரும் போது ‘பார்க்காதே’ என்று கண்களை மறைப்பதோ, ‘போய் தண்ணி கொண்டு வா’ என்று திசை  திருப்புவதோ இன்று பொருந்தாது. அதைத் தவிர்த்து அந்த நேரத்தில் செக்ஸ் பற்றி வயதுக்குத் தகுந்த விதத்தில் பேசினால், பிள்ளை வளர்ந்த பிறகு  பாலுணர்வு பற்றி அவளுடன் பேசவும் போதிக்கவும் உதவும். அப்படிப் போதிக்கும் போது சில விஷயங்களை நீங்கள் அவசியம் வலியுறுத்த வேண்டும்.
அதாவது…
சற்றே வயது முதிர்ந்த ஆண் பிள்ளைகள், இளம்பெண்களைக் கவரக்கூடிய அபாயம் பற்றி… அவர்களில் சிலரிடம் உள்ள பணம், வாகனம் போன்றவை  அந்த ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்தக் கூடிய அபாயம் பற்றி…
அதன் தொடர்ச்சியாக பாலுறவில் ஈடுபடும் ரிஸ்க் தலைதூக்குவதைப் பற்றி…
அந்தத் தகாத உறவில் ஈடுபடுவதால் உண்டாகும் இன்னல்கள் (பாலியல் நோய் முதல் இளவயது கர்ப்பம் வரை) பற்றி…
இளவயதில் காதல் வயப்பட்டு, பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்து, குடும்பம் மற்றும் சமுதாய ஆதரவின்றி, தவிக்கிறவர்களைப் பற்றி…
இவை எல்லாவற்றையும் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தலாம். ‘என் பெண் அப்படிப்பட்டவள் அல்ல. தவறு செய்ய மாட்டாள்’  என்று  கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்கும் பெற்றோர், அவர்களின் பெண் ‘காம’ வலையில் சிக்கிய பிறகு படும் அவஸ்தைகளைப் பற்றிச்  சொல்வதற்கு ஆயிரமாயிரம் கதைகள் உண்டு என்னிடம்… காலத்துக்கேற்ற விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதே இந்த விஷயத்தில் பெற்றோருக்கு  நான் சொல்ல விரும்புகிற ஒரே அட்வைஸ்… விழித்துக் கொள்ளுங்கள் பெற்றோரே! மீடியாவின் தாக்கத்தில் டீன் ஏஜ்… எப்படி மீட்பது?

எண்ண சிதறல்கள்....இது கதை நேரம் !!

 994054_593419810707225_1943262688_n

இரு துறவிகள் ஒரு ஆற்றங்கரையைக் கடப்பதற்காக சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு இளம்பெண்ணோ கரையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார். மற்றவரோ, அந்தபெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார்.
மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி செலுத்திவிட்டு சென்று விட்டாள்.
துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது நேரம் கழித்து துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது அல்லவா? நீங்கள் ஏன் அந்த பெண்ணை கொண்டு வந்து கரையில் விட்டீர்? “என்றார். இரண்டாம் துறவி சொன்னார்: ”நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள் தான் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்கள்” என்றார்.

Wednesday, November 22, 2023

NEW FOLDER.EXE (Virus ) வைரஸ் நீக்க என்ன செய்வது ?

Z NEW FOLDER.EXE- What to do to remove the virus?

நியூ போல்டெர்  VIRUS என்றால் என்ன?


நியூஃபோல்டர்.exe (NEWFOLDER.EXE) வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான வைரஸ்களில் ஒன்றாகும், இது யூ.எஸ்.பி கோப்புகளில் கோப்புகளை மறைக்கிறது மற்றும் பணி மேலாளர், ரெஜிடிட் மற்றும் கோப்புறை விருப்பங்கள் போன்ற விஷயங்களை முடக்குகிறது. வைரஸ் உங்கள் தற்போதைய கோப்புகளைப் பிரதிபலிக்கும் .exe கோப்புகளை உருவாக்குகிறது, இது வைரஸ் உங்கள் சேமிப்பக இடத்தின் 50% ஐ எடுத்துக்கொள்கிறது, மேலும் பிற மோசமான பக்க விளைவுகளுடன், இது உங்கள் கணினி வேகம் மற்றும் செயல்திறனில் கடுமையான இழப்பை அனுபவிக்கும்.
உங்கள் கணணியில் Pen Drive சொருகும் போது NEWFOLDER.EXE virus என்று Folder ஒன்று உருவாகும் இதுவே வைரஸ் நம் கணினியில் உள்ளது என்பதை காணமுடியும்
நாம் எங்கு போனாலும் எம்முடன் ஒரு  Pen driveஇருக்கும். எமக்கு தேவையான விடயங்களை உடனடியாக  Internet இல் தேடி எடுத்து விட்டுPendrive  save  பண்ணுவோம். ஆனால் அங்கு எமது பென் டிரைவ் பாதுகாப்பாக இருக்கும் என்று எந்த நம்பிக்கையில் இருக்கலாம் சொல்லுங்க பார்ப்போம்.
அங்கு இங்கு எங்கு வேணுமானாலும் உங்களுக்கு இப்படி வைரஸ் தொல்லை இருந்தால்

Task manager is disabled.
Registry Editor is disabled.
Folder options not working.
Taking too much time for accessing pen drive.
Uses half of your computers processing power.

STEP :படி 1. புதிய கோப்புறை.exe ,(NEWFOLDER)வைரஸ் உங்கள் பணி மேலாளரை முடக்கியது(TASK MANAGER), அதனால்தான் நீங்கள் சிஎம்டியில்(CMD) குறிப்பிடப்பட்ட கட்டளைகளை TYPE செய்ய வேண்டும்.

முதலில் உங்கள் கணினியில் COMMAND PROMPT கட்டளையைத் திறக்க வேண்டும். கட்டளையைத் திறக்க ஸ்டார்ட் அப் அல்லது ஸ்டார்ட் (WINDOWS+R) KEY பொத்தானைக் கிளிக் செய்து சிஎம்டியைத்(CMD) தேடவும். நீங்கள் எந்த வழியிலும் இதைச் செய்யலாம், அதாவது ஒரே நேரத்தில் விண்டோஸ் லோகோ பொத்தானை அழுத்தவும், பின்னர் ரன் கட்டளை சாளரத்தைத் திறக்க "ஆர்"(R)

கட்டளை பிராம்ப்பைத் திறக்கவும்(OPEN THE COMMAND PROMPT). "தொடங்கு""START" என்பதற்குச் சென்று மேற்கோள் குறிகள் இல்லாமல் "சிஎம்டி" "CMD"ஐத் தேடவும். "ஓடு" "RUN"என்பதைக் கிளிக் செய்க. இது ஒரு கருப்பு சாளரத்தை ஏற்படுத்தும்.


Enter the following commands one by one. These will delete the preliminary stages of the virus.

* taskkill /f /t /im “New Folder.exe”
* taskkill /f /t /im “SCVVHSOT.exe”
* taskkill /f /t /im “SCVHSOT.exe”
* taskkill /f /t /im “scvhosts.exe”
* taskkill /f /t /im “hinhem.scr”
* taskkill /f /t /im “blastclnnn.exe”


மேலே குறிப்பிட்ட கட்டளைகளை கட்டளையில் தட்டச்சு செய்வது பணியைக் கொன்றது. இப்போது நீங்கள் புதிய கோப்புறை வைரஸால் முடக்கப்பட்ட பணி மேலாளர் மற்றும் ரீகடிட்டை(regedit) இயக்க வேண்டும்.

STEP:2 படி 2. இயக்கு பணி மேலாளர் மற்றும் ரெஜிடிட்
விண்டோஸ் லோகோ பொத்தானை ஒன்றாக அழுத்தவும், பின்னர் ரன் கட்டளை சாளரத்தைத் திறக்க "ஆர்"

கட்டளைகளை ஒவ்வொன்றாக தட்டச்சு செய்து ஒவ்வொன்றுக்குப் பிறகு உள்ளிடவும்.

  • reg add HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v Disable Task Mgr /t REG_DWORD /d 0 /f

  • reg add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f

  • reg add HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v Disable Registry Tools /t REG_DWORD /d 0 /f

  • reg add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v Disable Registry Tools /t REG_DWORD /d 0 /f

STEP:3 படி 3. மறைக்கப்பட்ட கோப்புகளை இயக்கவும் மற்றும் வைரஸ் மூல கோப்புகளை நீக்கவும்
தொடக்க பொத்தானின் தொடக்க பொத்தான் படத்தைக் கிளிக் செய்வதன் மூலம் கோப்புறை விருப்பங்களைத் திறந்து, கண்ட்ரோல் பேனலுக்குச் செல்லவும்,

தோற்றம் மற்றும் தனிப்பயனாக்கத்தைக் கண்டுபிடித்து, கோப்புறை விருப்பங்களைக் கிளிக் செய்க.



CLICK ON THE VIEW TAB பார்வை தாவலைக் கிளிக் செய்க. மேம்பட்ட அமைப்புகளின் கீழ், மறைக்கப்பட்ட கோப்புகள், கோப்புறைகள் மற்றும் டிரைவ்களைக் காண்பி என்பதைச் சரிபார்த்து, பின்னர் சரி என்பதைக் கிளிக் செய்க.

பின்வரும் கோப்பகங்களுக்கு செல்லவும் அதாவது C:Windows, C: Windowssystem32 மற்றும் C:ஆவணங்கள் மற்றும் அமைப்புகள்அனைத்து பயனர்கள்ஆவணங்கள் மற்றும் கீழே குறிப்பிடப்பட்ட கோப்புகளை நீக்கவும்.



C:\WINDOWS\SCVVHSOT.exe
C:\WINDOWS\SCVHSOT.exe
C:\WINDOWS\hinhem.scr
C:\WINDOWS\system32\SCVHSOT.exe
C:\WINDOWS\system32\blastclnnn.exe
C:\WINDOWS\system32\autorun.ini
C:\Documents and Settings\All Users\Documents\SCVHSOT.exe
That’s it. You had successfully deleted virus from your computer/PC.

வீட்டிற்கு தேவையான பயனுள்ள சில குறிப்புகள் !!!!

 

1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.

9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.

10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள்!!


 Some Useful tips for home :
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

உருளைகிழங்கின் சில முக்கிய நன்மையை பற்றி காண்போம் ...

 

எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.
வாத நோய் குணமாகும்!
இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.
அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.
நீண்ட நாள் மலச்சிக்கல் தீர...
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.
தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்
முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.
உருளைகிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்


உடற்பயிற்சி செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ..

 






"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது வெறும் பழமொழியாக இருந்தாலும், இந்த நோயற்ற வாழ்வை பெறுவதற்கு நாம் சில முறைகளை பின்பற்ற வேண்டும். சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது மட்டுமல்லாது, அதனை தொடர்ந்து சில நேர உடற்பயிற்சியையும் செய்து வந்தால், ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம். இன்றைய பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் தனது உடல் வளர்ப்பு பயிற்சிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். நிறைவான வலிமைமிக்க உடலை பெறுவது என்பது வெறும் விறுவிறுப்பான உடற்பயிற்சியால் மட்டும் கிடைப்பதல்ல. சரியான செயல்முறையும் முதன்மையாக விளங்குகின்றது. அதற்காக ஒரே இரவில் மாயங்களை எதிர்பார்க்கக் கூடாது. உடல் நன்கு அழகாக கட்டுக்கோப்புடன் இருக்க நேரம், குவிப்பு மற்றும் நிலைதிறன் ஆகியவை முக்கியமானவை. அதில் முதல் 6-12 மாதங்களில் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க நேரிடும்.
 எனினும், ஒழுங்கான முறையையும், முதன்மையான தற்காப்பு விதிகளையும் கடைபிடிப்பதே முக்கியமானதாகும். அதிலும் கனமான பொருட்களை கையாளும் போது, நமக்கு அடிபடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது பாடி பில்டிங் முயற்சியில் இறங்கும் போது, என்னவெல்லாம், எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில அடிப்படை டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சரியான முறைப்படி அடியெடுத்து வைக்கலாம்.

டாக்டரிடம் பரிசோதித்தல்

 
உடல் வளர்க்கும் இலக்குகளை தொடங்குவதற்கு முன்பு, மருத்துவரை சந்தித்து உங்களது மருத்துவ நிலைமையை கண்டறிய வேண்டும். எந்த ஒரு உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும், டாக்டரை சந்திப்பது உடல்நல சிக்கல்கள் வருவதில் இருந்து தவிர்க்க உதவும்.
சிறந்த ஜிம் கூடத்தை தேர்வு செய்தல்

எல்லா வகையான நவீனக் கருவிகளும், பல ப்ரீ வெயிட்களும் நிறைந்த கூடத்தை தேர்வு செய்தல் உடல் வளர்ப்பதில் முக்கியமான ஒன்றாகும். மேலும், இடம், சுற்றுச்சூழல், ஆட்கள் மற்றும் கட்டணம் ஆகியவற்றையும் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
முன் உதாரணமாக வைத்தல்

யாரையாவது முன் உதாரணமாக வைத்து, இந்த முறையை தொடர்ந்து வருவது மிகச் சிறந்த வழியாகும். அவர் உங்களை கவர்ந்த பாடி பில்டர், பவர் லிப்ட்டர் அல்லது விளையாட்டு வீரராகவும் இருக்கலாம்.
தசைகளை வலுவடையச் செய்தல்
 
கனமான பொருட்களை தூக்குவதற்கு முன்பு, தசைகளை வலுவடையச் செய்தல், நமக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். மேலும் தசைகள் வலியை தாங்கக் கூடியவைகளாக மாறிய பின்பு, உடல் வளர்ப்பு முறையை தொடங்கலாம்.

நமது உடலை கண்காணிப்பது

 
பாடி பில்டிங்கின் தொடக்க நிலையில் இருப்பதால், சிரமமான முறைகளை செய்வதற்கு முன்பு, மனதை தயார்படுத்தி உடல் வளர்ப்புக்கு அனுமதிக்க வேண்டும். உங்களால் சிரமத்தை கையாள முடியும் என்ற போது அதனை செய்யலாம். மேலும் உங்கள் இலக்குகளை நிதானமாகவும், முறையாகவும் அடைய வேண்டும். அதுமட்டுமின்றி உடலுக்கு ஓய்வு தேவைப்படும் போது, அதிக சிரமம் கொடுக்காமல், ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் செய்யலாம்.
சிறந்த பயிற்சி கூட்டாளியை சேர்த்துக் கொண்டு நல்ல முறையில் செயல்படுதல்

ஆம், நண்பர்கள் தான் சிறந்த முறையில் உங்களை ஊக்குவித்து, உங்கள் இலக்குகளை அடைய உதவி புரிவார்கள். அதனால், நல்ல பயிற்சி கூட்டாளியை தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கும்.
ஸ்ட்ரெட்சிங் மிகவும் முக்கியம்
 
ஒவ்வொரு வொர்க் அவுட்க்கு பிறகும் ஸ்ட்ரெட்சிங் தசைகளை மீளப்பெறுவதர்க்கும், வீக்கங்களை தவிர்ப்பதற்கும் உதவும். மேலும் இது உடலின் வளையும் தன்மையை பராமரித்து, வொர்க் அவுட் செய்யும் போது ஏற்படும் காயங்களையும் தடுக்க உதவும்.
நன்றாக மூச்சுவிடுதல்
 
பயிற்சியின் போது மூச்சுவிடுதல் மிகவும் முக்கியமான உடற்பயிற்சியாகும். ஒழுங்காக மூச்சுவிடுவது தசை அணுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளிக்கவும், தசைகள் சுருங்கவும், தசைகளை வளர்க்கவும், எனர்ஜியை தருவதற்கும் உதவி புரிகிறது.
நல்ல தூக்கம்

ஒரு நாளில் 7-8 மணிநேர தூக்கம் அவசியமானதாகும். ஏனெனில் நல்ல ஆழ்ந்த உறக்கம், தசைகளை வளர்க்கவும் மீளப்பெறுதலுக்கும் உதவி புரியும்.
சீரான டயட் முறையை பின்பற்றுதல்

நல்ல சீரான டயட் உடல் வளர்ப்பு பயிற்சியில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. நாள் முழுவதும் வொர்க் அவுட் செய்யும் முன்னும் பின்பும் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் டயட்டில் அதிகமான புரோட்டீன்களும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்து இருக்க வேண்டும்.
இதமான உடற்பயிற்சியுடன் ஆரம்பியுங்கள்

பளுமிக்க உடற்பயிற்சி சாதனங்களை தூக்குவதற்கு முன்பாக, சின்ன சின்ன உடற்பயிற்சிகளையும், இதய தசைகளுக்கும் அசைவு கொடுங்கள். இதனால் உடலின் இணங்கு தன்மை மேம்பட்டு காயங்கள் ஏற்படுவதும் குறையும்.
 
இலக்கை நிர்ணயிக்க வேண்டும்
உடல் கட்டமைப்பை மெருகேற்றும் பயணத்தில், அடைய முடிகின்ற இலக்கை நிர்ணயிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடல் கட்டமைப்பை ஒரு வாரத்திலேயோ அல்லது ஒரு மாதத்திலேயோ அடைந்து விட முடியாது. அதனால் எவ்வளவு வேகமாக இலக்கை அடைகிறீர்கள் என்பதை பார்க்காமல், உங்களால் முடிந்த இலக்கை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
விதவிதமான உடற்பயிற்சிளைப் பின்பற்றுங்கள்
தினசரி உடற்பயிற்சி நடைமுறையை மாற்றிக் கொண்டே இருங்கள். அதனால் உங்களால் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து பார்க்க முடியும். மேலும் அவைகளில் எது உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதையும் கண்டறிய இது உதவும்.
மீட்சி நேரத்தை திட்டமிடுங்கள்
தொடர்ந்து 24/7 உடற்பயிற்சி செய்ய முடியாது. அதனால் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டால், ஓரிரு நாட்களுக்கு பின் ஓய்வில் ஈடுபடுங்கள். தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால், சில நாட்களோ அல்லது சில வாரங்களோ ஓய்வு எடுப்பது அவசியமாகும்.
ஃப்ரீ வெயிட்
இயந்திரம் அல்லது கம்பி போன்றவைகளுக்கு பதிலாக டம்-பெல்ஸ் அல்லது பார்பெல்ஸ் போன்ற கருவிகளை பயன்படுத்துங்கள். இது தசைகளை வளர்க்க மட்டுமல்லாமல், உடலின் கூட்டு பொருண்மையையும் வளர்க்கும்.

காம்பவுண்ட் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்

குந்துகை, டெட் லிப்ட், பெஞ்ச் பிரஸ், மிலிட்டரி பிரஸ் மற்றும் டம்-பெல் போன்ற காம்பவுண்ட் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், உடல் தசைகளின் ஃபைபர்கள் பெரிதாகும்.
பலவித எடைகளை பலமுறை தூக்குதல்
உடற்பயிற்சி செய்வதில் அடுத்த கட்டத்தை அடைய அடைய, உபயோகிக்கும் பளுவின் எடையையும் அதிகரிக்க வேண்டும். ஒரு எடையை தூக்கிய பின் அடுத்த முறை எடையை அதிகரிக்க வேண்டும். இதனை பின்பற்றினால் உடலை ஏற்றும் முயற்சியில், உங்களின் சாதனையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

தோரணையில் கவனம் தேவை

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது சரியான, திடமான தோரணை இருப்பது மிகவும் அவசியம். எப்போதுமே சரியான தோரணையுடன் இருங்கள். அதே போல் திடமாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக பளு தூக்கும் போது, உங்கள் தோரணையின் மேல் கவனம் தேவை. இல்லையென்றால் அது காயங்களை ஏற்படுத்திவிடும்.
அதிகளவில் தண்ணீர் குடியுங்கள்
உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும். இது உடலின் நீர்ச்சத்தை இழக்க விடாமலும், சோர்வடையாமலும் பார்த்துக் கொள்ளும்.
காயங்களின் மீது அக்கறை தேவை
உடற்பயிற்சி செய்யும் போது சிறு காயம் ஏற்பட்டால் கூட, அதை லேசாக விட்டு விடாதீர்கள். சிலர் உடற்பயிற்சி செய்யும் உற்சாகத்தில் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் அவை பெரிதாக உங்களை பாதிக்காமல் இருக்க உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
 

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற 16 உணவுகள்!!

 





வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது நன்கு புத்திசாலித்தனத்துடனும், சிறந்த அறிவாளியாகவும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அவர்களின் மூளையை நன்கு செயல்பட வைக்கவும், ஆர்வத்தை அதிகரிக்கவும், மூளையின் இயக்கத்தை சீராக வைக்கக்கூடிய உணவுகளை சிறுவயதிலிருந்தே கொடுக்க வேண்டும். உடலிலேயே அதிக சத்துக்களை உறிஞ்சுவது மூளை தான். அதுமட்டுமின்றி, மூளை தான் உடலின் அனைத்து உறுப்புக்களை இயக்குகிறது. எனவே அத்தகைய முக்கியப் பகுதியை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் மாற்றிவிடுகின்றன.
எனவே மூளையை பாதுகாப்பதற்கு ஒரே வழி உணவு தான். ஆகவே அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு செயல்பட்டு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். சரி, இப்போது சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சீராக வைக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
சால்மன்
மீன்களில் சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட் உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு, மூளையின் வளர்ச்சியையும், செயல்பாட்டையும் சீராக வைக்கும்.
முட்டை
புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள முட்டையின் மஞ்சள் கருவில், கோலைன் என்னும் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டைகளை கொடுத்தால், குழந்தைகளின் மூளையானது சீராக இயங்கும்.
வேர்க்கடலை
பொதுவாக குழந்தைகளுக்கு பொரித்த உணவுகளை ஸ்நாக்ஸாக கொடுப்பதற்கு பதிலாக, வேர்க்கடலையை வறுத்தோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால், மூளைக்கு மிகவும் நல்லது.
தானியங்கள்
மூளைக்கு எப்போதும் குளுக்கோஸானது சீராக செல்ல வேண்டும். அத்தகைய குளுக்கோஸ் தானியங்களில் அதிகம் உள்ளது. எனவே தானியங்களால் ஆன பிரட்டை வைத்து, காலை அல்லது மாலை வேளையில் சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளின் வயிறு நிறைவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
ஓட்ஸ்
குழந்தைகளின் மூளைக்கு வளர்ச்சிக்கு தேவையான உணவுகளில் முக்கியமானது ஓட்ஸ். ஓட்ஸ் குழந்தைகளின் உடலுக்கு மட்டுமின்றி, மூளைக்கும் ஆரோக்கியத்தை தரும். எனவே அவ்வப்போது ஓட்ஸ் கொடுத்து, ஞாபக சக்தியை அதிகமாக்குங்கள்.
பெர்ரிப் பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களின் சுவைகள் குழந்தைகளுக்கு பிடிக்கும். மேலும் இத்தகைய பழங்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. ஆகவே இதனை கொடுக்க மறக்க வேண்டாம்.
பீன்ஸ்
உண்மையில் பீன்ஸ் ஒரு ஸ்பெஷலான உணவுப் பொருள் தான். ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் மற்றும் நிறைய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதிலும் காராமணி மற்றும் பிண்டோ பீன்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்ற பீன்ஸ்களை விட அதிகமாக உள்ளது. அதிலும் ALA என்னும் மூளையின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் தேவையான பொருள் உள்ளது.
தக்காளி
மூளையில் ஏற்படும் பிரச்சனையை போக்குவதில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை உடலில் பிரச்சனையை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன. எனவே குழந்தைகளுக்கு ஞாபக மறதி எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு, தக்காளியை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. எனஅவ குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதற்கு, பூசணி விதைகளை கொடுக்க வேண்டும்.
குடைமிளகாய்
குடைமிளகாயும் மூளைக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவு. அதிலும் குடைமிளகாயில், ஆரஞ்சை விட, அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே உணவில் குடைமிளகாயை சேர்த்து கொடுப்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தினமும் பால் பொருட்களை கொடுப்பது அவசியமாகிறது.
நட்ஸ்
நட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ குறைபாடும் ஞாபக மறதியை உண்டாக்கும். எனவே நட்ஸ் வகைகளை அதிகம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதில் உடலுக்கு தேவையான கொழுப்புக்களும் நிறைந்துள்ளன
ப்ராக்கோலி
ப்ராக்கோலி மற்றொரு வகையான மூளைக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுப் பொருள். இதில் வைட்டமின் கே, சி மற்றும் ஆன்டி.-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகள் சாப்பிடும் போது, மூளை நன்கு செயல்படும்.
ஆளி விதை
ஆளி விதையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல கொழுப்புக்களான ALA அதிகம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சேர்த்து கொடுத்து, உடலையும் மூளையின் செயல்பாட்டையும் சீராக இயங்கச் செய்யலாம்.
டார்க் சாக்லெட்
சாக்லெட் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சில அம்மாக்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் குழந்தைகளுக்கு ஒரு துண்டு டார்க் சாக்லெட் கொடுப்பது மிகவும் நல்லது. இது அவர்களது உடலை மட்டும் ஆரோக்கியத்துடன் வைப்பதோடு, மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைக்கும்.
கோகோ பீன்ஸ்
ஆய்வு ஒன்றில் கோகோ பீன்ஸை அதிகம் சாப்பிட்டால், மூளையின் ஆரோக்கியமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோகோ பீன்ஸை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மிகவும் நல்லது.

கேன்சர் என்றால் என்ன ?

கேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer)
.
 ஒன்னு தெரிஞ்சிக்கோ .. இந்த பயம் தான் கான்சரை விட உயிர்க் கொல்லி..ஆங்கிலத்துல சொல்லனும்னா FEAR ..it has got two meanings
1 .Forget Everything And Run
2. Face Everything And Rise Choice is yours…
மொதல்ல நம்மில் பாதி பேருக்கு இந்த கேன்சரைப் பற்றி சரியான அறிவு இல்லை..அதைப் பற்றி பேச்செடுத்தாலேக் காது குடுத்துக் கேட்க கூட பயப்படுகிறார்கள்..அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டாலெ அதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்றும் வரும் முன் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து விடும்.
x

செல்லி : சின்ன வயசு நல்லாத் தான் பா இருந்தா .. தொண்டை அடைக்கறா மாதிரி யே இருக்கு..முழுங்கும் போது கஷ்டமா இருக்குன்னு சொல்லுவா…ஒரு நாள் திடீர்னு வாந்தி எடுத்தா ..டாக்டர் கிட்ட போய்க் காட்டினா ..டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தா ஃபுட் பைப் ல கேன்சராம் .உருக் கொலஞ்சு போய்டாங்க மொத்த குடும்பமும்..ஆபரேஷன் பண்ணனுமாம்..அப்புறம் கீமோதெரபி ட்ரீட்மென்ட் ..பயம்மா இருக்கு எந்த நேரத்துல யாருக்கு என்ன வரும்னே சொல்ல முடில.

செல்லி : சரி சொல்லேன் ..இந்த கேன்சர் னா என்ன?

கூக்லி : கேன்சர் செல்கள் எல்லார் உடம்பிலும் இருக்கும் தெரியுமா? .அவை கம்மியாக இருக்கும்..இப்ப உன் உடம்பிலும் இருக்கும்..

செல்லி : அப்ப நான் போய் டெஸ்ட் பண்ணி ட்ரீட் பண்ண வேண்டாமா?

கூக்லி : வேணடாம். ..இப்ப போய் டெஸ்ட் பண்ணி பார்த்தா தெரியாது..அது பல மில்லியன் செல்களாக உருவெடுக்கும் போது தான் தெரிய வரும் ....அதுவரை எந்த டெஸ்ட் செஞ்சாலும் தெரியாது..

செல்லி :அப்ப எப்ப தெரிய வரும்..எப்படி இந்த செல்கள் அதிகமாக பெருகும்?

கூக்லி : மனுஷ உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் போது இந்த செல்கள் பெருகாது..எப்ப நோய் எதிர்ப்பு சக்தி குறையுதோ அப்ப இந்த செல்களும் பெருகும்..எதேனும் சத்து உடம்புல குறையும் போது இந்த செல்கள் பெருக வாய்ப்பு இருக்கு..பெருகி கேன்சர் கட்டி வருகிறது..

செல்லி ஆபரேஷன் பண்ணித்தானே கட்டிய எடுக்கணும்?

கூக்லி : ஆமாம்.

செல்லி : அப்புறம் அந்த செல்கள் உடம்புல அழிக்க கீமோதெரபி செஞ்சுதானெ ஆகணும் ?

கூக்லி : நாம் அணுகும் முறை தான் தவறு..இதை புரிஞ்சிக்கோ.வீட்டிலோ ரோட்டிலோ கொசு அதிகமாக இருக்கும் போது கொசுவை அழித்தால் மட்டும் போதாது..குப்பைகளை தேக்கி வைக்காமல் இருக்கனும்..குப்பை இருக்க இருக்க கொசு வந்துகிட்டே தான் இருக்கும்..அதனால் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..அது போல் தான் நம் உடலையும் இந்த கேன்சர் கிருமிகள் பெருகாத வாறு வைத்திருக்க வேண்டும்..

செல்லி : அப்ப கீமோதெரபி நல்லதில்லையா?

கீமொதெரபீ சிகிச்சை (Chemotherapy) வேகமா வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாம எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. இன்னும் குடல், கிட்னி, இதயம், போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.

கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது..இதனால் மீண்டும் கேன்சர் செல்கள் பெருகத் தான் வாய்ப்பிருக்கு.. கீமோ தெரபி செஞ்டுகிட்டதால தான் நிறைய பேர் இறக்கிறார்கள்.


(i) மொதல்ல இந்த கேன்சர் செல் பெருகாமல் இருக்க உடலில் ஆக்சிஜன் லெவெல் அதிகமாக இருக்க வேண்டும் .ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலைல கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. அதனால் தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும். மூச்சுப் பயிற்ச்சி செய்தால் உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்கும் இந்த ஆக்சிஜன் தெரபி உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

(ii) இரண்டாவது பெருக்கி அமிலத் தன்மை உள்ள உணவுகள்.. கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழி கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணாமல் தவிர்க்கணும்.ஆடு,பன்றி இறைச்சி சோடா,கோக் ,காஃபி டீ போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்கனும்.. இதற்கு பதிலா நிறைய க்ரீன் டீ குடிக்கலாம் .மீன் மற்றும் சிக்கன் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்..

(iii) பச்சைக் காய்கறிகள் ,பழங்கள் முக்கியமாக நார் சத்து நிறைந்த இலை தழைகள் தான் மிகச் சிறந்த உணவு..காரத் தன்மை உள்ள உடலில் கேன்சர் செல்கள் அழிந்து விடும் அல்லது பெருகாது . சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம்,. 

ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் சத்தைப் பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல சுத்திகரிக்கப் பட்ட நீரை நிறைய அருந்துவதும் கேன்சர் செல்களை எதிர்த்து போராட உதவும்.  சர்க்கரை ,உப்பும் மிகவும் கெடுதல்..அப்புறம் ரொம்ப முக்கியம் நோ (No Cigarette) சிகரெட் நோ (No Hot Drinks) மதுபானம்.

(iv) ஸ்ட்ரெஸ் இல்லாமல் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளணும்.ஸ்ட்ரெஸ் (Stress) இன்னொரு கேன்சர் செல் பெருக்கி. ஸ்ட்ரெஸ் (Stress) உடலின் அமிலத் தன்மையை அதிகரிக்கும் அதனால் கேன்சர் செல் (Cancer Cell) பெருக வழி வகுக்கும்.

4.கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! பாசிடிவான சிந்தனைகள் , ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கும்..

5. கோப தாபங்கள் கொள்ளாம, அன்பா,உற்சாகமா எல்லாவற்றையும் நல்ல நகைசுவை உணர்வோட அணுக கத்துக்கணும்..

இந்த  மூன்று விஷ்யங்களை  கடைப் பிடிச்சு ,கூட இருக்குறவங்களும்  சப்போர்டிவா இருந்து இதை எதிர்த்து போராட என்னால,  நம் குடும்பத்தால முடியும் என்கிற (Positive) பாசிடிவ் எண்ணத்தோடு இந்த கேன்சரை அணுகினால் (Chemotherapy) கீமோதெர்பி சிகிச்சை இல்லாமலேயே இயற்கையாக கேன்சரை வென்று விடலாம்..


எடைக்குறைப்பு பற்றிய தகவல் !!

 


எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.
இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும்.
மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது. வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம்.
இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது

We are Back

 Coming Soon