New Trend Tamil

Browse all latest informations

Showing posts with label Mothers Care. Show all posts
Showing posts with label Mothers Care. Show all posts

Thursday, November 23, 2023

உலகத்தில் சிறந்தது தாய்மைதான் !!



ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப் பெண்மனி சிட்னி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27 வாரங்களே ஆன நிலையில். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண், ஒரு பெண். இரு குழந்தைகளையும் காக்க மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.


பெண் குழந்தை உயிரபிழைத்தது. ஆனால்..  மருத்துவர்கள் கடைசி வரை போராடியும் ஆண்

குழந்தையைக் காப்பாற்ற  முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப்பட்டது.


அதைத் தாங்கிக் கொள்ள முடியாத..  அந்தத் தாய்.. இறந்த குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டார்.


தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன் உடலுடன் குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார். அப்போது.. குழந்தை மெதுவாக மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார். உடன் மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட ஆரம்பித்ததைக் கூறினார்.


மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து.. இங்குபேட்டரில் வைத்து.. சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் கண் விழித்தது குழந்தை..


அதைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட தாயின் விரல்களை குழந்தை பிடித்துக் கொண்டது.


இறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது எது..

ஆம்..


அந்த தாயின் அரவணைப்பு..


இப்போது சொல்லுங்கள், உலகத்தில் சிறந்தது தாய்மைதானே...

Wednesday, July 17, 2019

கர்ப்பிணிப்பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் !!! (Pregnant Women Notes)

Following the pregnancy period safety Notes:










  •  கர்ப்பிணி பெண்கள் தினசரி பசும்பாலில் நல்ல குங்குமப்பூ கலந்து அருந்தினால், சிகப்பான குழந்தை பிறக்கும். மேலும் கர்ப்பிணி பெண்கள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும்.

  • ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே மூச்சு வாங்கும் என்றாலும், பலருக்கு கர்ப்ப காலத்தின் பின் பகுதியில் இந்தச் சிரமம் இருக்கும். இதனால் குழந்தைக்கோ, தாய்க்கோ கெடுதல் நேராது.

  • கர்ப்பிணிகள் இறுக்கமான காற்று புகாத ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளைக் கூட தொள தொளவென அணிவது சிறந்தது.

  •  மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது. மேல்நோக்கிப்படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளும்.
  • அதிக உஷ்ணமுள்ள பதார்த்தங்களை உண்ணக் கூடாது. உடம்பில் யாதொரு அடியும் படக்கூடாது. பயம் உண்டாகக் கூடிய இடங்களைப் பார்க்கக் கூடாது. மிகக் கடுஞ் சொற்களைக் கேட்பது கூடாது. மிகவும் களைப்பைக் கொடுக்கக்கூடிய வாகனங்களில் செல்லக் கூடாது.


  • வயிற்றில் கரு வளரும் போது கருக்காலத்தின் பின்பகுதியில் வயிறு முன் தள்ளியும் அந்தக்கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் தோள்பட்டைகள் பின் தள்ளியும் இருக்கும். இந்த நிலை கர்ப்பிணிகளுக்கு முதுகு வலியை உண்டாக்கும். இது ஹீல்ஸ் செருப்பு அணிவதால் வலிகூடும்.

  •  பணியிலிருக்கும் கர்ப்பிணிகள் கடுமையான உடல் உழைப்பு இல்லாத பட்சத்தில் கர்ப்ப காலம் முழுவதும் கூட பணி புரியலாம்.


  •  கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடற்பயிற்சிப் பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை. கடினமான உடற்பயிற்சிகளை பண்ணக் கூடாது. நடைபயிற்சி மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும்.

  •  மயக்கம், படபடப்பு ஆகியவை கர்ப்பிணிகளுக்கு சகஜம். அவர்களின் உடலில் ஏற்படும் இரத்த ஓட்ட வேறுபாடுதான் இதற்குக்காரணம்.

  •  அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பிணிகளுக்கு வழக்கமாக ஏற்படுவதுதான். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வழக்கமான மற்றொரு பிரச்சனை நெஞ்செரிச்சல்.
Related image
  • விரிவடையும் கருப்பை வயிற்றை அழுத்துவதால்                             ஜீரணக்கோளாறுகள் உண்டாகும். இதனால்                                       கருக்காலத்தின் பின்பகுதியில் நெஞ்செரிச்சல் ஏற்படும். சில      பெண்களுக்கு மசக்கை காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும்.