New Trend Tamil

Browse all latest informations

Wednesday, November 22, 2023

உடற்பயிற்சி செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ..

 






"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது வெறும் பழமொழியாக இருந்தாலும், இந்த நோயற்ற வாழ்வை பெறுவதற்கு நாம் சில முறைகளை பின்பற்ற வேண்டும். சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது மட்டுமல்லாது, அதனை தொடர்ந்து சில நேர உடற்பயிற்சியையும் செய்து வந்தால், ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம். இன்றைய பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்கள் தனது உடல் வளர்ப்பு பயிற்சிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். நிறைவான வலிமைமிக்க உடலை பெறுவது என்பது வெறும் விறுவிறுப்பான உடற்பயிற்சியால் மட்டும் கிடைப்பதல்ல. சரியான செயல்முறையும் முதன்மையாக விளங்குகின்றது. அதற்காக ஒரே இரவில் மாயங்களை எதிர்பார்க்கக் கூடாது. உடல் நன்கு அழகாக கட்டுக்கோப்புடன் இருக்க நேரம், குவிப்பு மற்றும் நிலைதிறன் ஆகியவை முக்கியமானவை. அதில் முதல் 6-12 மாதங்களில் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க நேரிடும்.
 எனினும், ஒழுங்கான முறையையும், முதன்மையான தற்காப்பு விதிகளையும் கடைபிடிப்பதே முக்கியமானதாகும். அதிலும் கனமான பொருட்களை கையாளும் போது, நமக்கு அடிபடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது பாடி பில்டிங் முயற்சியில் இறங்கும் போது, என்னவெல்லாம், எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில அடிப்படை டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சரியான முறைப்படி அடியெடுத்து வைக்கலாம்.

டாக்டரிடம் பரிசோதித்தல்

 
உடல் வளர்க்கும் இலக்குகளை தொடங்குவதற்கு முன்பு, மருத்துவரை சந்தித்து உங்களது மருத்துவ நிலைமையை கண்டறிய வேண்டும். எந்த ஒரு உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும், டாக்டரை சந்திப்பது உடல்நல சிக்கல்கள் வருவதில் இருந்து தவிர்க்க உதவும்.
சிறந்த ஜிம் கூடத்தை தேர்வு செய்தல்

எல்லா வகையான நவீனக் கருவிகளும், பல ப்ரீ வெயிட்களும் நிறைந்த கூடத்தை தேர்வு செய்தல் உடல் வளர்ப்பதில் முக்கியமான ஒன்றாகும். மேலும், இடம், சுற்றுச்சூழல், ஆட்கள் மற்றும் கட்டணம் ஆகியவற்றையும் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
முன் உதாரணமாக வைத்தல்

யாரையாவது முன் உதாரணமாக வைத்து, இந்த முறையை தொடர்ந்து வருவது மிகச் சிறந்த வழியாகும். அவர் உங்களை கவர்ந்த பாடி பில்டர், பவர் லிப்ட்டர் அல்லது விளையாட்டு வீரராகவும் இருக்கலாம்.
தசைகளை வலுவடையச் செய்தல்
 
கனமான பொருட்களை தூக்குவதற்கு முன்பு, தசைகளை வலுவடையச் செய்தல், நமக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க உதவும். மேலும் தசைகள் வலியை தாங்கக் கூடியவைகளாக மாறிய பின்பு, உடல் வளர்ப்பு முறையை தொடங்கலாம்.

நமது உடலை கண்காணிப்பது

 
பாடி பில்டிங்கின் தொடக்க நிலையில் இருப்பதால், சிரமமான முறைகளை செய்வதற்கு முன்பு, மனதை தயார்படுத்தி உடல் வளர்ப்புக்கு அனுமதிக்க வேண்டும். உங்களால் சிரமத்தை கையாள முடியும் என்ற போது அதனை செய்யலாம். மேலும் உங்கள் இலக்குகளை நிதானமாகவும், முறையாகவும் அடைய வேண்டும். அதுமட்டுமின்றி உடலுக்கு ஓய்வு தேவைப்படும் போது, அதிக சிரமம் கொடுக்காமல், ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் செய்யலாம்.
சிறந்த பயிற்சி கூட்டாளியை சேர்த்துக் கொண்டு நல்ல முறையில் செயல்படுதல்

ஆம், நண்பர்கள் தான் சிறந்த முறையில் உங்களை ஊக்குவித்து, உங்கள் இலக்குகளை அடைய உதவி புரிவார்கள். அதனால், நல்ல பயிற்சி கூட்டாளியை தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கும்.
ஸ்ட்ரெட்சிங் மிகவும் முக்கியம்
 
ஒவ்வொரு வொர்க் அவுட்க்கு பிறகும் ஸ்ட்ரெட்சிங் தசைகளை மீளப்பெறுவதர்க்கும், வீக்கங்களை தவிர்ப்பதற்கும் உதவும். மேலும் இது உடலின் வளையும் தன்மையை பராமரித்து, வொர்க் அவுட் செய்யும் போது ஏற்படும் காயங்களையும் தடுக்க உதவும்.
நன்றாக மூச்சுவிடுதல்
 
பயிற்சியின் போது மூச்சுவிடுதல் மிகவும் முக்கியமான உடற்பயிற்சியாகும். ஒழுங்காக மூச்சுவிடுவது தசை அணுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளிக்கவும், தசைகள் சுருங்கவும், தசைகளை வளர்க்கவும், எனர்ஜியை தருவதற்கும் உதவி புரிகிறது.
நல்ல தூக்கம்

ஒரு நாளில் 7-8 மணிநேர தூக்கம் அவசியமானதாகும். ஏனெனில் நல்ல ஆழ்ந்த உறக்கம், தசைகளை வளர்க்கவும் மீளப்பெறுதலுக்கும் உதவி புரியும்.
சீரான டயட் முறையை பின்பற்றுதல்

நல்ல சீரான டயட் உடல் வளர்ப்பு பயிற்சியில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. நாள் முழுவதும் வொர்க் அவுட் செய்யும் முன்னும் பின்பும் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் டயட்டில் அதிகமான புரோட்டீன்களும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்து இருக்க வேண்டும்.
இதமான உடற்பயிற்சியுடன் ஆரம்பியுங்கள்

பளுமிக்க உடற்பயிற்சி சாதனங்களை தூக்குவதற்கு முன்பாக, சின்ன சின்ன உடற்பயிற்சிகளையும், இதய தசைகளுக்கும் அசைவு கொடுங்கள். இதனால் உடலின் இணங்கு தன்மை மேம்பட்டு காயங்கள் ஏற்படுவதும் குறையும்.
 
இலக்கை நிர்ணயிக்க வேண்டும்
உடல் கட்டமைப்பை மெருகேற்றும் பயணத்தில், அடைய முடிகின்ற இலக்கை நிர்ணயிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடல் கட்டமைப்பை ஒரு வாரத்திலேயோ அல்லது ஒரு மாதத்திலேயோ அடைந்து விட முடியாது. அதனால் எவ்வளவு வேகமாக இலக்கை அடைகிறீர்கள் என்பதை பார்க்காமல், உங்களால் முடிந்த இலக்கை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
விதவிதமான உடற்பயிற்சிளைப் பின்பற்றுங்கள்
தினசரி உடற்பயிற்சி நடைமுறையை மாற்றிக் கொண்டே இருங்கள். அதனால் உங்களால் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து பார்க்க முடியும். மேலும் அவைகளில் எது உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதையும் கண்டறிய இது உதவும்.
மீட்சி நேரத்தை திட்டமிடுங்கள்
தொடர்ந்து 24/7 உடற்பயிற்சி செய்ய முடியாது. அதனால் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டால், ஓரிரு நாட்களுக்கு பின் ஓய்வில் ஈடுபடுங்கள். தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால், சில நாட்களோ அல்லது சில வாரங்களோ ஓய்வு எடுப்பது அவசியமாகும்.
ஃப்ரீ வெயிட்
இயந்திரம் அல்லது கம்பி போன்றவைகளுக்கு பதிலாக டம்-பெல்ஸ் அல்லது பார்பெல்ஸ் போன்ற கருவிகளை பயன்படுத்துங்கள். இது தசைகளை வளர்க்க மட்டுமல்லாமல், உடலின் கூட்டு பொருண்மையையும் வளர்க்கும்.

காம்பவுண்ட் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்

குந்துகை, டெட் லிப்ட், பெஞ்ச் பிரஸ், மிலிட்டரி பிரஸ் மற்றும் டம்-பெல் போன்ற காம்பவுண்ட் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், உடல் தசைகளின் ஃபைபர்கள் பெரிதாகும்.
பலவித எடைகளை பலமுறை தூக்குதல்
உடற்பயிற்சி செய்வதில் அடுத்த கட்டத்தை அடைய அடைய, உபயோகிக்கும் பளுவின் எடையையும் அதிகரிக்க வேண்டும். ஒரு எடையை தூக்கிய பின் அடுத்த முறை எடையை அதிகரிக்க வேண்டும். இதனை பின்பற்றினால் உடலை ஏற்றும் முயற்சியில், உங்களின் சாதனையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

தோரணையில் கவனம் தேவை

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது சரியான, திடமான தோரணை இருப்பது மிகவும் அவசியம். எப்போதுமே சரியான தோரணையுடன் இருங்கள். அதே போல் திடமாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக பளு தூக்கும் போது, உங்கள் தோரணையின் மேல் கவனம் தேவை. இல்லையென்றால் அது காயங்களை ஏற்படுத்திவிடும்.
அதிகளவில் தண்ணீர் குடியுங்கள்
உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும். இது உடலின் நீர்ச்சத்தை இழக்க விடாமலும், சோர்வடையாமலும் பார்த்துக் கொள்ளும்.
காயங்களின் மீது அக்கறை தேவை
உடற்பயிற்சி செய்யும் போது சிறு காயம் ஏற்பட்டால் கூட, அதை லேசாக விட்டு விடாதீர்கள். சிலர் உடற்பயிற்சி செய்யும் உற்சாகத்தில் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் அவை பெரிதாக உங்களை பாதிக்காமல் இருக்க உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
 

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற 16 உணவுகள்!!

 





வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது நன்கு புத்திசாலித்தனத்துடனும், சிறந்த அறிவாளியாகவும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அவர்களின் மூளையை நன்கு செயல்பட வைக்கவும், ஆர்வத்தை அதிகரிக்கவும், மூளையின் இயக்கத்தை சீராக வைக்கக்கூடிய உணவுகளை சிறுவயதிலிருந்தே கொடுக்க வேண்டும். உடலிலேயே அதிக சத்துக்களை உறிஞ்சுவது மூளை தான். அதுமட்டுமின்றி, மூளை தான் உடலின் அனைத்து உறுப்புக்களை இயக்குகிறது. எனவே அத்தகைய முக்கியப் பகுதியை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் மாற்றிவிடுகின்றன.
எனவே மூளையை பாதுகாப்பதற்கு ஒரே வழி உணவு தான். ஆகவே அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு செயல்பட்டு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். சரி, இப்போது சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சீராக வைக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
சால்மன்
மீன்களில் சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட் உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு, மூளையின் வளர்ச்சியையும், செயல்பாட்டையும் சீராக வைக்கும்.
முட்டை
புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள முட்டையின் மஞ்சள் கருவில், கோலைன் என்னும் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டைகளை கொடுத்தால், குழந்தைகளின் மூளையானது சீராக இயங்கும்.
வேர்க்கடலை
பொதுவாக குழந்தைகளுக்கு பொரித்த உணவுகளை ஸ்நாக்ஸாக கொடுப்பதற்கு பதிலாக, வேர்க்கடலையை வறுத்தோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால், மூளைக்கு மிகவும் நல்லது.
தானியங்கள்
மூளைக்கு எப்போதும் குளுக்கோஸானது சீராக செல்ல வேண்டும். அத்தகைய குளுக்கோஸ் தானியங்களில் அதிகம் உள்ளது. எனவே தானியங்களால் ஆன பிரட்டை வைத்து, காலை அல்லது மாலை வேளையில் சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளின் வயிறு நிறைவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
ஓட்ஸ்
குழந்தைகளின் மூளைக்கு வளர்ச்சிக்கு தேவையான உணவுகளில் முக்கியமானது ஓட்ஸ். ஓட்ஸ் குழந்தைகளின் உடலுக்கு மட்டுமின்றி, மூளைக்கும் ஆரோக்கியத்தை தரும். எனவே அவ்வப்போது ஓட்ஸ் கொடுத்து, ஞாபக சக்தியை அதிகமாக்குங்கள்.
பெர்ரிப் பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களின் சுவைகள் குழந்தைகளுக்கு பிடிக்கும். மேலும் இத்தகைய பழங்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. ஆகவே இதனை கொடுக்க மறக்க வேண்டாம்.
பீன்ஸ்
உண்மையில் பீன்ஸ் ஒரு ஸ்பெஷலான உணவுப் பொருள் தான். ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் மற்றும் நிறைய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதிலும் காராமணி மற்றும் பிண்டோ பீன்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்ற பீன்ஸ்களை விட அதிகமாக உள்ளது. அதிலும் ALA என்னும் மூளையின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் தேவையான பொருள் உள்ளது.
தக்காளி
மூளையில் ஏற்படும் பிரச்சனையை போக்குவதில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை உடலில் பிரச்சனையை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன. எனவே குழந்தைகளுக்கு ஞாபக மறதி எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு, தக்காளியை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. எனஅவ குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதற்கு, பூசணி விதைகளை கொடுக்க வேண்டும்.
குடைமிளகாய்
குடைமிளகாயும் மூளைக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவு. அதிலும் குடைமிளகாயில், ஆரஞ்சை விட, அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே உணவில் குடைமிளகாயை சேர்த்து கொடுப்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தினமும் பால் பொருட்களை கொடுப்பது அவசியமாகிறது.
நட்ஸ்
நட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ குறைபாடும் ஞாபக மறதியை உண்டாக்கும். எனவே நட்ஸ் வகைகளை அதிகம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதில் உடலுக்கு தேவையான கொழுப்புக்களும் நிறைந்துள்ளன
ப்ராக்கோலி
ப்ராக்கோலி மற்றொரு வகையான மூளைக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுப் பொருள். இதில் வைட்டமின் கே, சி மற்றும் ஆன்டி.-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகள் சாப்பிடும் போது, மூளை நன்கு செயல்படும்.
ஆளி விதை
ஆளி விதையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல கொழுப்புக்களான ALA அதிகம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சேர்த்து கொடுத்து, உடலையும் மூளையின் செயல்பாட்டையும் சீராக இயங்கச் செய்யலாம்.
டார்க் சாக்லெட்
சாக்லெட் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சில அம்மாக்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் குழந்தைகளுக்கு ஒரு துண்டு டார்க் சாக்லெட் கொடுப்பது மிகவும் நல்லது. இது அவர்களது உடலை மட்டும் ஆரோக்கியத்துடன் வைப்பதோடு, மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைக்கும்.
கோகோ பீன்ஸ்
ஆய்வு ஒன்றில் கோகோ பீன்ஸை அதிகம் சாப்பிட்டால், மூளையின் ஆரோக்கியமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோகோ பீன்ஸை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மிகவும் நல்லது.

கேன்சர் என்றால் என்ன ?

கேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer)
.
 ஒன்னு தெரிஞ்சிக்கோ .. இந்த பயம் தான் கான்சரை விட உயிர்க் கொல்லி..ஆங்கிலத்துல சொல்லனும்னா FEAR ..it has got two meanings
1 .Forget Everything And Run
2. Face Everything And Rise Choice is yours…
மொதல்ல நம்மில் பாதி பேருக்கு இந்த கேன்சரைப் பற்றி சரியான அறிவு இல்லை..அதைப் பற்றி பேச்செடுத்தாலேக் காது குடுத்துக் கேட்க கூட பயப்படுகிறார்கள்..அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டாலெ அதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்றும் வரும் முன் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து விடும்.
x

செல்லி : சின்ன வயசு நல்லாத் தான் பா இருந்தா .. தொண்டை அடைக்கறா மாதிரி யே இருக்கு..முழுங்கும் போது கஷ்டமா இருக்குன்னு சொல்லுவா…ஒரு நாள் திடீர்னு வாந்தி எடுத்தா ..டாக்டர் கிட்ட போய்க் காட்டினா ..டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தா ஃபுட் பைப் ல கேன்சராம் .உருக் கொலஞ்சு போய்டாங்க மொத்த குடும்பமும்..ஆபரேஷன் பண்ணனுமாம்..அப்புறம் கீமோதெரபி ட்ரீட்மென்ட் ..பயம்மா இருக்கு எந்த நேரத்துல யாருக்கு என்ன வரும்னே சொல்ல முடில.

செல்லி : சரி சொல்லேன் ..இந்த கேன்சர் னா என்ன?

கூக்லி : கேன்சர் செல்கள் எல்லார் உடம்பிலும் இருக்கும் தெரியுமா? .அவை கம்மியாக இருக்கும்..இப்ப உன் உடம்பிலும் இருக்கும்..

செல்லி : அப்ப நான் போய் டெஸ்ட் பண்ணி ட்ரீட் பண்ண வேண்டாமா?

கூக்லி : வேணடாம். ..இப்ப போய் டெஸ்ட் பண்ணி பார்த்தா தெரியாது..அது பல மில்லியன் செல்களாக உருவெடுக்கும் போது தான் தெரிய வரும் ....அதுவரை எந்த டெஸ்ட் செஞ்சாலும் தெரியாது..

செல்லி :அப்ப எப்ப தெரிய வரும்..எப்படி இந்த செல்கள் அதிகமாக பெருகும்?

கூக்லி : மனுஷ உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் போது இந்த செல்கள் பெருகாது..எப்ப நோய் எதிர்ப்பு சக்தி குறையுதோ அப்ப இந்த செல்களும் பெருகும்..எதேனும் சத்து உடம்புல குறையும் போது இந்த செல்கள் பெருக வாய்ப்பு இருக்கு..பெருகி கேன்சர் கட்டி வருகிறது..

செல்லி ஆபரேஷன் பண்ணித்தானே கட்டிய எடுக்கணும்?

கூக்லி : ஆமாம்.

செல்லி : அப்புறம் அந்த செல்கள் உடம்புல அழிக்க கீமோதெரபி செஞ்சுதானெ ஆகணும் ?

கூக்லி : நாம் அணுகும் முறை தான் தவறு..இதை புரிஞ்சிக்கோ.வீட்டிலோ ரோட்டிலோ கொசு அதிகமாக இருக்கும் போது கொசுவை அழித்தால் மட்டும் போதாது..குப்பைகளை தேக்கி வைக்காமல் இருக்கனும்..குப்பை இருக்க இருக்க கொசு வந்துகிட்டே தான் இருக்கும்..அதனால் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..அது போல் தான் நம் உடலையும் இந்த கேன்சர் கிருமிகள் பெருகாத வாறு வைத்திருக்க வேண்டும்..

செல்லி : அப்ப கீமோதெரபி நல்லதில்லையா?

கீமொதெரபீ சிகிச்சை (Chemotherapy) வேகமா வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாம எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. இன்னும் குடல், கிட்னி, இதயம், போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.

கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது..இதனால் மீண்டும் கேன்சர் செல்கள் பெருகத் தான் வாய்ப்பிருக்கு.. கீமோ தெரபி செஞ்டுகிட்டதால தான் நிறைய பேர் இறக்கிறார்கள்.


(i) மொதல்ல இந்த கேன்சர் செல் பெருகாமல் இருக்க உடலில் ஆக்சிஜன் லெவெல் அதிகமாக இருக்க வேண்டும் .ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலைல கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. அதனால் தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும். மூச்சுப் பயிற்ச்சி செய்தால் உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்கும் இந்த ஆக்சிஜன் தெரபி உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

(ii) இரண்டாவது பெருக்கி அமிலத் தன்மை உள்ள உணவுகள்.. கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழி கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணாமல் தவிர்க்கணும்.ஆடு,பன்றி இறைச்சி சோடா,கோக் ,காஃபி டீ போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்கனும்.. இதற்கு பதிலா நிறைய க்ரீன் டீ குடிக்கலாம் .மீன் மற்றும் சிக்கன் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்..

(iii) பச்சைக் காய்கறிகள் ,பழங்கள் முக்கியமாக நார் சத்து நிறைந்த இலை தழைகள் தான் மிகச் சிறந்த உணவு..காரத் தன்மை உள்ள உடலில் கேன்சர் செல்கள் அழிந்து விடும் அல்லது பெருகாது . சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம்,. 

ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் சத்தைப் பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல சுத்திகரிக்கப் பட்ட நீரை நிறைய அருந்துவதும் கேன்சர் செல்களை எதிர்த்து போராட உதவும்.  சர்க்கரை ,உப்பும் மிகவும் கெடுதல்..அப்புறம் ரொம்ப முக்கியம் நோ (No Cigarette) சிகரெட் நோ (No Hot Drinks) மதுபானம்.

(iv) ஸ்ட்ரெஸ் இல்லாமல் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளணும்.ஸ்ட்ரெஸ் (Stress) இன்னொரு கேன்சர் செல் பெருக்கி. ஸ்ட்ரெஸ் (Stress) உடலின் அமிலத் தன்மையை அதிகரிக்கும் அதனால் கேன்சர் செல் (Cancer Cell) பெருக வழி வகுக்கும்.

4.கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! பாசிடிவான சிந்தனைகள் , ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கும்..

5. கோப தாபங்கள் கொள்ளாம, அன்பா,உற்சாகமா எல்லாவற்றையும் நல்ல நகைசுவை உணர்வோட அணுக கத்துக்கணும்..

இந்த  மூன்று விஷ்யங்களை  கடைப் பிடிச்சு ,கூட இருக்குறவங்களும்  சப்போர்டிவா இருந்து இதை எதிர்த்து போராட என்னால,  நம் குடும்பத்தால முடியும் என்கிற (Positive) பாசிடிவ் எண்ணத்தோடு இந்த கேன்சரை அணுகினால் (Chemotherapy) கீமோதெர்பி சிகிச்சை இல்லாமலேயே இயற்கையாக கேன்சரை வென்று விடலாம்..


எடைக்குறைப்பு பற்றிய தகவல் !!

 


எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.
இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும்.
மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது. வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம்.
இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது

We are Back

 Coming Soon 




Wednesday, March 29, 2023

இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்களா!!

 



இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கிறது என்று நினைப்பது மிகப்பெரிய தவறு, பல பில்லியன் கோடி நட்சத்திரங்களில், ஒரு நட்சத்திரம் ஆன சூரியன் என நாம் பெயரிட்டு கொண்ட நெருப்பு பந்தை சுற்றி வரும் ஒரு சுமாரான கிரகத்தில் அதை விட சுமாரான அமைப்போடு சுற்றும் சுமார் மூஞ்சி குமார்கள் தான் நாம் என்பதை மறந்து விட வேண்டாம், எண்ணிலடங்கா உயிரினங்கள் இப்பிரபஞ்சம் முழுவதும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது, அவை நம்மை விட அறிவில் மிஞ்சியதாக இருக்கலாம், முக அமைப்பில் நம்மை விட சுமாராக இருக்கலாம்,

நிகழ்தகவு (Probability) படி கணக்கு போட்டு பார்த்தால் பூமியை மாதிரியே கிரகங்கள் அமைவதற்கும் நம்மை மாதிரி அறிவான உயிரிகள் பரிணாம் அடைவதற்கும் எச்சக் கச்ச வாய்ப்புள்ளது என்பது தான் அறிவியல் கூறுகிறது,,,

பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு நல்ல குணம் உண்டு அதாவது பக்கத்து வீட்டுக்காரன் வீட்ல என்ன நடக்குது? சண்ட ஏதாவது நடக்குதா இல்ல சுமூகமா போகுதா? இன்னைக்கு என்ன குழம்பு வச்சானுங்க இன்னும் வாசனையே வரலயே ? என்பது போன்ற நமது அண்டை வீட்டார்களின் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் தான். அமெரிக்காவிற்கு அது ரெம்பவே அதிகம், பாசம் பக்கத்து நாட்டவர்கள் வரை கூட நீளும், நாம் மட்டும் இப்படி ஏன்டா பொறந்தோம்னு நொந்துகிட்டு இருக்கோமா இல்ல நம்மள மாதிரியே யாராவது வேற்று கிரக உயிரிகள் இதே மாதிரி பீல் பண்ணிட்டு இருக்கிறார்களா என்று கண்டறிய பல முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.


இதற்காகவே நாசா விஞ்ஞானிகள் 1977-இல் 'வாயேஜர்-1' என்ற ஒரு விண்கப்பலை தயார் செய்து அதில் நமது உருவம், நமது பூமியை பற்றிய சில குறிப்புகள், இசை குறிப்புகள், நமது மொழிகள் மற்றும் இன்னபிற தகவல்களை பதிவு செய்து, நமது சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கிரகம் மீதும் மோதாத மாதிரி பூமியில் இருந்து ஏவி விட்டனர், ஒரு முறை பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி எந்த பொருளையும் வெளியே எறிந்து விட்டால் போதும் அது வேறொரு ஈர்ப்பு விசையில் ஆட்படும் வரையிலும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கும்,


இப்போது விஷயம் என்ன வென்றால், அந்த விண்கப்பலுக்கு 36 வயது ஆகிவிட்டது, போன வருடம் தான் நமது சூரிய குடும்பத்தை கடந்து வெளியே சென்றது, தற்போது பூமியில் இருந்து அது 19,0000000 (19 million) கிலோமேட்டர்கள் தொலைவில் பயணித்து கொண்டிருக்கிறது, நமது சூரிய குடும்பத்தை தாண்டி வெளியே அடர்த்தியான 'பிளாஸ்மா' வாயுக்கள் நடுவே அது பயணித்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது, வாயுக்களின் அதிர்வுகளால் ஏற்படும் சத்தத்தை அது பதிவு செய்து ரேடியோ அலைகளாக மாற்றி பூமிக்கு அனுப்பியுள்ளது, என்ன ஆச்சர்யம் என்று கேட்கிறீர்களா ??,


எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள்,  36 வருடங்களாக பயணம் செய்து 19 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து அது அனுப்பிய ஒலி, வெறும் 17 மணி நேரத்தில் நமக்கு கிடைத்து விட்டது ரேடியோ அலைகள் வாயிலாக மற்றும் இத்தனை தொலைவில் கேட்கும் ஒலியை நாம் இங்கே உக்காந்து கேட்கிறோமே என்ற பிரம்மிப்பு.

இத்தனை தேடல்கள் எதற்காக என்றால் அது போற போக்கில் ஏதாவது உயிரினங்களிடம் சிக்கலாம், அங்கே நமது முப்பாட்டர்கள் யாராவது வேறொரு உருவில் உக்காந்து நண்டு வறுத்து தின்று கொண்டிருக்கலாம், நம்மை தொடர்பு கொள்ளலாம்,, அனைத்துமே சாத்தியமே!!! அந்த ஒலியை கேட்க லிங்கை கிளிக்கவும்.

http://www.youtube.com/watch?v=LIAZWb9_si4

Tuesday, June 16, 2020

மெமரி கார்ட் பற்றிய சிறப்பியல்புகள் !!! (Memory card characteristics of it)

நினைவக அட்டை:
(Memory card ) 

 SDகார்டு மற்றும் நினைவகஅட்டை (MemoryCards) என்று அதை நாம் கூறுகிறோம் , வெளிப்புற சேமிப்பு நினைவு பெட்டகம் (External Storage Memory Box ) , நம்முடைய மொபைல்களில் இன்று வரை நாம்  பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் .இந்த SD card என்பதன் பொருள் Secure Digital ஆகும் .















மெமரி கார்டுகளின் வகைகள் :

இந்த நினைவக அட்டைகள் முக்கியமாக மூன்று பிரிவுகளாக பிரிக்கபடுகிறது SD, SDHC, SDXC என்பவை தான்  இதில் முக்கிய மூன்று வகையாக உள்ளது.

SD card:

உங்கள் மொபைலில் உபயோகிக்கும் சாதாரண குறைவான சேமிப்பு திறன் கொண்ட சேமிப்பு பெட்டகங்களை உள்ளடக்கியது . இதனுடைய அளவு  என்பது  128 MB இல்  இருந்து 2 GB வரை தான் இந்தவகை மெமரிகார்டுகள் இருக்கும். இந்த மெமரி கார்டு உடைய திறன் மிகவும்  குறைவான அளவில் இருக்கும்.

 SDHC :

 SD card க்கு அடுத்து சற்று மேம்படுத்த பட்ட வகையில், உள்ளதுதான்  SDHC,
 இதனுடைய அளவு  என்பது  4GB  இல்  இருந்து 32 GB வரை தான் இந்தவகை மெமரிகார்டுகள்  இருக்கும். இந்தவகை கார்டுகளில் ஒரு பிரத்தேயேக குறியீடு அச்சிடப்பட்டு இருக்கும். Class Rating மற்றும் Speed என்று ஒரு சிறிய வட்டம் மூலம் இவை குறிக்கப்பட்டு இருக்கும் .



இவற்றில்  
CLASS- 2,
CLASS- 4,
CLASS- 6  மற்றும் 
CLASS -10 

என்கிற 4 வகை CLASS ஸ்பீட்கள் உள்ளது. இந்த CLASS கார்டுகள் அனைத்துமே உங்கள் மொபைலுக்கு Data Transfer ஆக கூடிய வேகத்தை குறிக்கும் குறியீடுகள். எடுத்துக்காட்டாக உங்கள் மொபைலில் 400 MB கொண்ட வீடியோ பைலை நீங்கள் ஏற்ற வேண்டும் எனில், நீங்கள் பயன்படுத்தும் கார்டு ஆனது CLASS -10 மெமரி கார்டாக இருந்தால், ஒரு செகண்டிற்கு  10 MB பைலை உங்கள் மொபைலுக்கு பரிமாற்றம் செய்யும்.



UHS அதாவது Ultra High Speed மெமரி கார்டு அறிமுகப்படுத்த பட்டது. இதன் குறியீடு U  என்று போடப்பட்டு இருக்கும். இதில் மேலும் Phase 1 மற்றும் Phase 3 என்று பிரிக்கப்பட்டது. Phase 1 ஆனது 50 MB Per Sec (ஒரு நொடிக்கு) இல் இருந்து 100 MB வரை Transfer  செய்யும். Phase 2 ஆனது  
300 MB Per Sec (ஒரு நொடிக்கு) வரை Transfer செய்யும்.

கடைசியாக SDXC கார்டு வகைகள் 64Gb இல் இருந்து 2TB அதாவது 2000 GB  வரையிலான மெமரி கார்டுகளை கொண்டு உள்ளது.  
இந்த மெமரி கார்டுகளிலும் முன்பு சொன்ன அனைத்து  CLASS ஸ்பீட்களிலும் இருக்கிறது .



அதிக திறன் உடைய மொபைலில் குறைந்த  திறன் மெமரி கார்டு பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு வீடியோ திறக்கப்படும் நேரம், அது Play ஆகின்ற டைம் மற்றும் Performance ஆகியவை சரியான முறையில் இருக்காது. Up to 8 GB சப்போர்ட் என்று ஒரு மொபைலில் கொடுக்கப்பட்டு இருந்தால்,அந்த அளவு வரைக்கும் தான் உங்கள் மொபைல் எந்த தடை இல்லாமல்  நன்றாக இயங்கும் என்று அர்த்தம். மேலும் அதற்கு மேல் பயன்படுத்தும் பொழுது மொபைல் சரியாக அந்த மெமரி கார்டு  இயங்காது என்பதை வைத்து தெரிந்து கொள்ளவேண்டும்.










Friday, June 12, 2020

அற்புதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் -இடேர்கோ - (Electric Scooter etergo )

Amazing Electric Scooter- ETERGO



நெதர்லாந்து நாட்டில் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இடேர்கோ - ETERGO நிறுவனம், மிக சிறப்பான டிசைனை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆப்ஸ் கூட்டர் (AppScooter) 2018 - ஆம் ஆண்டு முதன்முறையாக விற்பனைக்கு வந்தது.  இந்த மாடலை இந்தியாவிற்க்கு கொண்டு வருவதனை ஓலா  எலக்ட்ரிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.






ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நெதர்லாந்து நாட்டின் இடேர்கோ (ETERGO )  எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது, இடேர்கோ ஆப்ஸ்கூட்டர் இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

ஆப்ஸ்கூட்டரினை மிகவும் நவீனத்துவமான டிசைன் அம்சங்களை கொண்டிருப்பதுடன் நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் ( LED HEADLIGHT) பெற்று மூன்று பேட்டரியை கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு பேட்டரியும் 80 கிமீ பயணிக்கும் திறனை கொண்டுள்ளதால், முழுமையான சிங்கிள் பேட்டரி சார்ஜில் 240 கிமீ பயணிக்கும் திறன் கொண்டிருக்கும்.



  • 0- 45 கிமீ வேகத்தை எட்டுவதற்கு ( 3.9 Seconds) விநாடிகளை எடுத்துக் கொள்ளும். 
  • முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஷாக் அப்சார்பர் பெற்று இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 12 அங்குல அலாய் வீல் பெற்றதாக அமைந்துள்ளது.
  • 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்ற ஆப்ஸ்கூட்டர் வை-ஃபை ப்ளூடூத் ஆதரவு, நேவிகேஷன், பாடல்கள், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை பெற்றிருக்கின்றது.

இடேர்கோ நிறுவனத்தை கையகப்படுத்திய ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் மற்றும் தலைவர் பவிஷ் அகர்வால் கூறியதாவது ,

எதிர்கால மொபிலிட்டி தேவைகளை பூர்த்தி செய்வதில் மின் வாகனங்கள் முக்கிய பங்காற்றும். கோவிட்-19 ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் மின் வாகனங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். 


 ஒவ்வொரு ஆண்டும் கார் விற்பனையை விட இரண்டு மடங்காக இரு சக்கர வாகன விற்பனை பதிவு செய்து வருகின்றது. இந்நிலையில் மிக சிறப்பான டிசைன், நுட்பம் மற்றும் திறன் பெற்ற எங்களது மாடல் எங்களுக்கு வளமையான எதிர்காலத்தை வழங்கும் என நம்புவதாக இருக்கிறார் .

மேலும் ஓலா எலக்ட்ரிக் ( OLA ELECTRIC ) பல்வேறு முன்னணி மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுடன் சார்ஜிங், பேட்டரி ஸ்வாப் தொடர்பான முயற்சிகளுக்கு பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.




Monday, June 1, 2020

உடலை குறைக்க உதவுகின்ற உணவுகளை காண்போம் !!!

Let's find foods that help reduce the body


காலையும், மதியமும் உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறு இல்லை. ஏனென்றால் காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் சும்மா இருக்ககூடாது, ஏதேனும் வேலைகள் செய்துக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால், இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்.



நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது, ​​காலை உணவு உங்கள் நாள் முழுவதும் தொனியை அமைக்கும். தவறான உணவுகளை உட்கொள்வது உங்கள் ஏக்கங்களை பெருக்கி, நாள் தொடங்குவதற்கு முன்பே உங்களை சோம்பேறித்தனம் ஆக்கும். உடல் எடையை குறைக்க உதவும் 14 ஆரோக்கியமான காலை உணவுகள் என்னவென்று பார்ப்போம். புரதசத்து மற்றும் செலினியம் மற்றும் ரைபோஃப்ளேவின் (riboflavin) போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் முட்டைகள் ஊட்டச்சத்தின் உண்மையான சக்தியாகும். 


எடை இழப்புக்கு தீவிர ஊக்கத்தை அளிக்க காலை உணவோடு சாப்பிடும்போது முட்டைகள் பசியைக் குறைக்கும். எடுத்துக்காட்டாக, அதிக எடையுள்ள 30 பெண்களில் ஒரு ஆய்வில், காலை உணவுக்கு முட்டை சாப்பிடுவது







Sunday, May 31, 2020

மாதுளை பழம் பற்றி தெரிந்து கொள்வோம் !!! ( Pomegranate fruit)

மாதுளை (PomegranatePunica granatum)  

Pomegranate PNG images free download

மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது, இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது

மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவையாகும்.


மாதுளையின் வகைகள் :

  • ஸ்பேனிஷ் ரூபி 
  • ஆலந்தி
  • வெள்ளோடு
  • காபுல்
  • தோல்கா
  • மஸ்கட் ரெட்
  • கண்டதாரி
  • பிடானா

How good is a pomegranate detox? - Quora

வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும். மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.


பயன்படுத்தப்படும் பகுதி : 

இத்தாவரதின் இலைகல், பட்டை, மலர், கனி மற்றும விதை மருத்துவகுனம் வாய்ந்தவை

மாதுளையின் பயன்கள் :

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.[சான்று தேவை]

Organic Pomegranate Juice – Tun-Asia International Export Services

மாதுளை மரத்தின் பட்டைகளிலும் வோ்களிலும் "Pyridine" வகுப்பைச் சார்ந்த ஆல்கலாய்டுகள் "Pelletierine" மற்றும் "Iso Pelletierine" உள்ளன. "Tanin" என்னும் மருந்துச் சாரத்துடன் மரப்பட்டைகளிலுள்ள"Pelletierine Tannate" என்னும் சத்துப்பொருள் தான் புழுக் கொல்லி செய்கையை நிலை நிறுத்த செய்கிறது. 

மாதுளம் பழ விதையில்  "Punicic Acid" என்னும் அமிலம் உள்ளது. இது ஒரு நுண் கிருமி கொல்லியாகும்.அதனால் தான் நுண்கிருமிகளால் உண்டாகும் மலட்டு பிரச்சனைக்கு இது மருந்தாகிறது.

மாதுளம் பிஞ்சு: 
பிஞ்சைக் காயவைத்துப் பொடிசெய்து ஏலக்காய் தூள், கசகசாத் தூள், குங்கிலியத்தூள் ஒரு கிராம் அளவாகச் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்தால் சீதக் கழிச்சல் குணமாகும். பூவின் சாறும் அறுகம்புல்லின் சாறும் ஓரளவு சேர்த்துக் கொடுக்க மூக்கில் இருந்து குருதி வடிவது நிற்கும்.
Small Size Pomegranate at Rs 249.71/kilogram | Pomegranates | ID ...

இலைகள் : 


Pomegranate Leaves » Top Facts


இலைகள் அரைத்து பசையாக்கி , கன்நோய் தீர பயன்படுத்தலாம். இலைசாவி வயிற்றுப்போக்கை தீர்க்க பயன்படுத்தலாம்.

மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளைக்கு ஆங்கிலத்தில் பொமிகிரேனட் என்ற பெயரும் பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.



Thursday, August 15, 2019

ஆலிவ் ஆயில் தரும் பயன்கள் - (Uses of Olive Oil)

Uses of Olive Oil :



ஆலிவ் எண்ணெய் ஆலிவிலிருந்து பெறப்படுகிறது மற்றும் இது மத்திய தரைக்கடல் உணவின் பிரதானமாகும். எண்ணெயை உட்கொள்ளும்போது பல ஊட்டச்சத்து நன்மைகள் உள்ளன, ஆனால் இது தோல் மற்றும் கூந்தலுக்கும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

தோல் மற்றும் முகத்திற்கு ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் : 
                           (Benefits of olive oil for the skin)

ஆலிவ் எண்ணெய் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக  (Antioxidant) செயல்படுகிறது, இது ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கும் ஒரு பொருளாகும். ஆக்ஸிஜனேற்றம் என்பது ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்கக்கூடிய ஒரு செயல்முறையாகும், அவை உயிரணுக்களை சேதப்படுத்தும் மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ரசாயனங்கள் ஆகும்.

சருமத்தில் பயன்படுத்தும்போது, ​​ஆக்ஸிஜனேற்றிகள் முன்கூட்டிய வயதைத் தடுக்கலாம். மேலும், சில ஆராய்ச்சிகள் சூரிய ஒளிக்குப் பிறகு தோலில் ஆலிவ் எண்ணெயைப் போடுவது புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்களை எதிர்த்துப் போராடக்கூடும் என்று கூறுகின்றன ஆய்வுகள்

ஆய்வில், விஞ்ஞானிகள் எண்ணெயை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு (Ultraviolet (UV) rays )வெளிப்படுத்திய எலிகளின் தோலில் பயன்படுத்தினர். இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது தோலில் ஆலிவ் எண்ணெய் இருந்த எலிகளில் கட்டி வளர்ச்சி கணிசமாகக் குறைவாக இருந்தது.


ஆலிவ் எண்ணெயின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மனித தோலில் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் இந்த பகுதியில் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.


வைட்டமின் உள்ளடக்கம் ( Vitamin content)


ஆலிவ் எண்ணெயில் கொழுப்பு-கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன. இந்த வைட்டமின்கள் சில சருமத்திற்கு நன்மை பயக்கும்.


எடுத்துக்காட்டாக, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி உள்ளிட்ட பல்வேறு தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்க முழுவதும் வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்தினர்.



பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகள் ( Antibacterial effects)

ஆலிவ் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தோலில் உள்ள பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் ஆலிவ் எண்ணெயில்  இருப்பது குறித்து மிகக் குறைவான ஆய்வுகளே உள்ளன.

ஆயினும்கூட, ஆலிவ் எண்ணெய் சில நேரங்களில் சருமத்தின் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படலாம். இது டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் கால் புண்கள் உள்ளவர்களுக்கு குணப்படுத்துவதையும் மேம்படுத்தக்கூடும்.



சருமத்தில் ஆலிவ் எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது 
                              (How to Use Olive oil on face)


* ஃபேஸ் வாஷ், பாடி வாஷ், சோப் மற்றும் லோஷன்கள் உள்ளிட்ட பல தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளில் ஆலிவ் எண்ணெய் ஒரு மூலப்பொருள் ஆகும். தோலில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கான பிற வழிகள் பின்வருமாறு:

* ஷேவிங் கிரீம் மாற்றாக. ஆலிவ் எண்ணெய் ஒரு பாதுகாப்பான மற்றும் இயற்கை வழங்க முடியும் நெருங்கிய ஷேவிற்கான மசகு எண்ணெய். உங்கள் உடலைக் கழுவிய பின் கூடுதல் டீஸ்பூன் முகத்திற்கு  தேய்க்கவும்.

* மரத்தினால் செய்த உங்கள் சொந்த தளபாடங்கள் பாலிஷ் செய்யுங்கள்

* மரத்தினால் செய்த சில வீட்டில் தயாரிக்கப்பட்ட தளபாடங்கள் மெருகூட்டுங்கள் 

*  விரல் நகங்கள். வெட்டுக்காயங்களை ஈரப்பதமாக்க ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தவும் அல்லது எண்ணெயை கலக்கவும்.

* உலர்ந்த கூந்தலில்  சிறிது ஆலிவ் எண்ணையை போட்டு சீவுங்கள்.

*  பருப்புகளுக்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த பருத்தி துணியைப் பயன்படுத்துங்கள்.

* எஃகு மற்றும் பித்தளை பிரகாசிக்கவும். ஒரு ஆலிவ் எண்ணெயை ஒரு சுத்தமான துணியால் தேய்க்கவும்.

* உடலில்  அரிப்பு ஏற்படும் இடத்தில் தடுக்க இந்த ஆலிவ் எண்ணெய் உதவுகிறது.

* ஒப்பனை அகற்று (Makeup Removal) உங்கள் கண்களுக்குக் கீழே, உங்கள் கன்னங்கள் மற்றும் நெற்றியில் தடவவும், பின்னர் ஈரமான துணியால் துடைக்கவும்.


* ஷூ பாலிஷ் போடுவதற்கு முன் ஆலிவ் எண்ணெயை தெளிப்பதன் மூலம் உங்கள் காலணிகள்  மிளிரும். 









Tuesday, August 6, 2019

சென்னையில் உள்ள 24 மணிநேரமும் செயல்படும் மருந்தகம் ( 24 hours Pharmacy in chennai )

 24 hours working Medical Shops in Chennai Address & Contact No.


பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண் :







முத்து மருந்தகம் (Muthu Pharmacy)



எண் : 26 தரை தளம், எக்மோர் ஹை ரோடு, 
ஹோண்டா ஷோரூமுக்கு எதிரில் 
எக்மோர், சென்னை - 600008.

பல்லவரம் 24 மணி மருத்துவர்கள்
எண் / 1 தரை தளம்,  ராஜாஜி நகர்
சுப்பிரமணியன் சுருள் வீதி, 
பல்லாவரம், சென்னை - 600043

அப்பல்லோ பார்மசி (Apollo Pharmacy)

சென்னை மருத்துவ முகவர் (Chennai Medical Agency)
எண் 6, ரெட்டி தெரு, விருங்கம்பாக்கம், 
சென்னை 600092 ,போன்: 8122611111

ஸ்வஸ்தி பார்மசி (SwastiPharmacy)                          
எண் 70, ராஜீவ் காந்தி சலாய், 
ஓஎம்ஆர் சாலை, 
சோழிங்கநல்லூர், 
சென்னை - 600119,

அப்பல்லோ பார்மஸி (Apollo Pharmacy)
74, என்எஸ்சி போஸ் ரோடு,
சவுகார்பேட்டை.
போன்: 044&25330832.


கருப்பையா பார்மசி (Karuppiah Pharmacy)
எண் 139/61, லஸ் சர்ச் ரோடு, மைலாப்பூர், 
சென்னை - 600004, 
சென்னை மீனாட்சி மருத்துவமனை எதிரில்   


அப்பல்லோ பார்மஸி (Apollo Pharmacy)
445, மின்ட் தெரு,
சவுகார்பேட்டை.
போன்: 044&25295999.


அம்ருதா பார்மஸி (Amrutha Pharmacy)
12, ஜாபர் ஷெரங் தெரு,
பாரிமுனை.
போன்: 044&25240131.


அன்னை பார்மஸி (Annai Pharmacy)
3, சரஸ்வதி நகர், முதல் மெயின் தெரு,
திருவொற்றியூர்.
போன்: 044&25740521.

அப்பல்லோ பார்மஸி (Apollo Pharmacy)
449, திருவொற்றியூர் ஹைரோடு,
வண்ணாரப்பேட்டை.
போன்: 044&42078585.


ஸ்ரேயா மெடிக்கல்ஸ் (Shreya medicals)
924, எல்லையம்மன் கோயில் தெரு,
டிஎச் ரோடு, திருவொற்றியூர்.
போன்: 044&25995234.


அப்பல்லோ பார்மஸி (Apollo Pharmacy)
645, திருவொற்றியூர் ஹைரோடு,
தண்டையார்பேட்டை.
போன்: 044&25913333.


ஆனந்த் ஹாஸ்பிடல் (Anand Hospitals)
201, காமராஜர் சாலை,
மணலி.
போன்: 044&25942900.



பாவா மெடிக்கல்ஸ் ( Bawa Medicals)
2, 38வது தெரு,
கொளத்தூர் மெயின் ரோடு,
ஜிகேஎம் காலனி.
போன்: 044&66424804.


அபிராமி மெடிக்கல்ஸ் (Abirami Medicals)
9/2, எஸ்ஆர்பி கோயில் தெரு,
பெரியார் நகர்.
போன்: 044&26703888.


ஈஸ்வர் மெடிக்கல் பவுண்டேஷன் (Eshwar Medical Foundation)
1, பாரதி நகர், ரெட்ஹில்ஸ் ரோடு,
கொளத்தூர்.
போன்: 044&26710351.

ஆர்.எஸ்.மெடிக்கல்ஸ் (R.S Medicals)
6, எம்ஆர் நகர்,
தண்டையார்பேட்டை ஹைரோடு,
கொடுங்கையூர்.
போன்: 044&25581865.

Saturday, August 3, 2019

கம்ப்யூட்டரில் இன்டர்நெட் கட் ஆகிவிட்டால் சரி செய்யும் முறை !!! (how to Troubleshooting Internet conncetion)

how to Troubleshooting  Internet conncetion







இன்றைய உலகில் இணைய இணைப்பு (InternetConnection)  மிகவும்  இன்றியமையாத  தேவை. நாம் அனைவரும் இணையம் பயன்படுத்தும் போது  ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று இருக்கின்றது. அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் (suddenly) என விட்டுப் போவது, நாம் அடிக்கடி  காணும்   பிரச்னை இவைதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும் மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. 



பொதுவாக இது போல கட் ஆகும்போது, உடனே கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் (Restart) செய்து பார்க்கிறோம்.  நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் இதுதான் உங்களது இணைப்பு தீடீரென்று தடைபடுவதற்கு காரணம்  இதை ஒரு முறை செக் (Check) செய்து பார்க்க வேண்டும்.

இன்டர்நெட் பிரச்சனைக்கு தீர்வு வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத்தினை (internet Modem) மீண்டும் ரீபூட் (Reboot) செய்திடுங்கள். ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரௌட்டரை (Router) ஆன் (power on) செய்ய வேண்டும்.

உங்களுக்கு ரௌட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை 
ரீ ஸ்டார்ட் (Restart) செய்யவேண்டும். அதன் பின் கேபிள் மோடத்தினை 
ரீ ஸ்டார்ட் செய்யவேண்டும்.மோடத்தில் (modem) விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் (Blink) தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று அர்த்தம். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்யவேண்டும்.

அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் (Internet Service Provider) கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்யவேண்டும்.  அதற்கு முன் அவரிடம், எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள் அப்போது தான் உங்களால் எளிதாக அவரிடம் பேச முடியும்.

Friday, August 2, 2019

குடும்ப அட்டையை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறுவது எப்படி ? (How to get Family Card Right to Information Act)

"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை" - Right to Information


அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்தநிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில
கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.
யார் தகவல் கேட்கலாம்? (Who can ask for information?)
எந்த ஒரு இந்திய குடிமகனும் தகவல் பெறலாம்.
யாரிடம் தகவல் பெறலாம்? (Who Can Get Information?)
அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள் போன்றவைகளிடம் தகவல் கேட்கலாம்.
தகவல் அளிக்க யாருக்கெல்லாம் விலக்கு?
தகவல் அளிப்பதிலிருந்து ஒரு சில அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையான்மை, ஒருமைப்பாடு, ராணுவம் சார்ந்த தொழில் நுட்பம் போன்ற தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அளிக்க தேவையில்லை. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல், தனி நபர் மூன்றாம் நபர் தகவல்கள், காவல் புலனாய்வு போன்ற தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.
தகவல் அளிப்பவர் யார்? (Who is the informant?)
அனைத்து நரசு துறைகளும் போது தகவல் அலுவலரை நியமித்து அது குறித்த தகவல்களை பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடவேண்டும்.
கட்டணம் எவ்வளவு? (How much is the fee?)
தகவல் பெற கட்டணம் ரூ.10 இதை ரொக்கமாகவோ, நீதி மன்ற வில்லையகவோ ஒட்டுவதன் மூலமாகவோ, வங்கி வரைவோலை, இந்திய போஸ்டல் ஆர்டர் மூலமாகவோ செலுத்த முடியும். ரயில்வே துறையில் தகவல் பெற ரூ.10ஒவ்வொரு நிமிடத்துக்கு ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.
கேட்க கூடிய தகவல் அதிக பக்கங்களை கொண்டதாக இருக்கும் பொது தகவல் கேட்பவர் பக்கத்துக்கு ரூ.2 செலுத்த வேண்டியிருக்கும்.
தகவல்களை சி.டி., பிளாப்பி வடிவில் நகல எடுத்தது பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். வறுமை கோட்டிற்குகீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? (Having trouble getting a family card?)
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மாதிரி கடிதம்
உங்களுக்கு குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் வழிமுறை தெரியவில்லை? தகவல் பெறும் உரிமைச்சட்டம்2005ன் கீழ் உங்கள் அனைத்து சிக்கலும் தீர்வு காண முடியும். பின்வரும் மாதிரி விண்ணப்பத்தில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து பயன்படுத்துங்கள். சந்தேகங்களை கேட்டறியுங்கள்.

தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம்
(ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்)

அனுப்புநர்:
தங்கள் முழு முகவரி
பெறுநர்:
பொது தகவல் அலுவலர் அவர்கள் ,
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம்,
................மாவட்டம்.
வணக்கம்,
பொருள்: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக
1)  புதிய குடும்ப அட்டை வாங்க ஒருவர் எந்த அலுவலகத்தில், யாரை அணுக வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.
2)  குடும்ப அட்டைக்கு விண்ணபிப்பதற்கான விண்ணப்பத்தை எந்த அலுவலகத்தில், எந்த அலுவலரிடம் பெற வேண்டும்? அதற்க்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அது எவளவு என்று தெரிவிக்கவும்
3)  குடும்ப அட்டை பெற விண்ணபிக்கும்போது என்னென்ன ஆவணங்களை விண்ணபத்துடன் இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
4)   குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் குடும்பத்தை வழங்கப்படும்? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் வழங்கபடவில்லைஎன்றால் அதற்க்கு முழு பொறுப்பு யார் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
5)   குடும்ப அட்டை அச்சிடப்பட்ட அலுவலகத்திற்கு வந்திருப்பதை விண்ணப்பதாரருக்கு எவ்வாறு தெரிவிக்க படும் ( எழுத்து மூலமாகவா அல்லது வாய்மொழி மூலமாகவா) என்ற விவரம் தெரிவிக்கவும்.
6) குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற விவரம் தெரிவிக்கவும். இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விவரமும் தெரிவிக்கவும்.
7) ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்துவிட்டால் (நகல் ஏதும் இல்லை என்றால்) புதிய குடும்பட்டை பெற எந்த அலுவலகத்தில் எந்த அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்? அப்படி விண்ணபித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்பட்டை கிடைக்கும். அது பற்றி தகவல் தரவும்.
8) ஒரு ஆண்(அ) பெண் தன்னுடைய பெயரை குடும்ப அட்டையிலுருந்து நீக்கம் செய்து பெயர் நீக்க சான்று பெற எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? இதனோடு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
9) ஒருவருக்கு நியாய விலை கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் எந்த அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும்? அப்புகார் மீது நடவடிக்கை எடுகாதபட்சதில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலர் முகவரி தெரிவிக்கவும்.
10) எடையில் குறைபாடு, தேவையற்ற பொருள்களை திணித்தல் ஆகிய புகார்களுக்கு யாரை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
11) நுகர்வோர் புகார் கூறியும், எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்ற விவரம் தெரிவிக்கவும். முடியும் என்றால் எந்த பிரிவின்கீழ் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவிக்கவும்.
12) எத்தனை விதமான குடும்ப அட்டைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. அவை வருமானத்தின் அடிப்படையில் உள்ளதா அல்லாஹ்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளனவா என்ற விவரம் தெரிவிக்கவும்.
நான் மேலே கூறிய தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் தகவல் தொடர்புடைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கின்றேன். இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக 10 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லையை ஒட்டியுள்ளேன். மேலும் தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியுரிப்பின், எத்தனை பக்கங்கள், அதற்க்கு பணம், எந்த தலைப்பில் செல்லுத்த வேண்டும் என்று தெரிவித்ததால், அதை நான் செலுத்த தயாராக உள்ளேன்.
இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பித்து குடும்ப
அட்டை பெறுவதற்கான தகவலை அறிந்து கொள்ளலாம்.