New Trend Tamil

Browse all latest informations

Wednesday, July 31, 2019

மாதவிடாய் ஏற்படும் போது உண்டாகும் பிரச்சனைகள் ( Menstruation Problems )


Problems that occur during menstruation



What is Menstruation?
Menstruation, also known as a period or monthly, is the regular discharge of blood and mucosal tissue (known as menses) from the inner lining of the uterus through the vagina.



சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்களுக்கும் , மாதவிடாய் முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கின்றாள்
மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது

அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது. முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது

ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாக சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.



மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம்ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான். செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும்


இவைதான் இளம் பெண்களின் ஒற்றைத்தலைவலிக்குக் காரணம்   எனலாம்  இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் 
(Hormonal Impulses )தான். மேலும் பீரியட்ஸ் (Periods) சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும்.



  • மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும்.இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும்திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள்
  • நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம்.
  • மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும்.
  • கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை.
  • கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து எண்டோமிட்ரியோஸிஸ் எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம்.
  •  எண்டோ மிட்ரியோஸிஸ் (Endo mitriosis) தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது.
எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சனைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சைகள் அவசியம் ஆகும்.

 
பெண்களின் இந்தப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும். வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.


  • பொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார். இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி (Pituitary) எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது


அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஹைம்போதலாமஸ் (Hypothalamus) எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும்.

 
சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ஹைபோதலாமஸ் எனும் பகுதி தான், பொதுவாக தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும்

பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.



மாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் எப்படி  தீர்வுகாணவேண்டும் என்று பார்க்கலாம் 




  • கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.
  • PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்று படும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.
  • மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம்
  • 7 அல்லது 8 மணி நேரம் உறக்கம் கட்டாயம் வேண்டும்.
  • இந்தச் சமயத்தில் வைட்டமின் ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.
  • மனஅழுத்தம் நீங்க வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்!

இந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது,

 இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்


குங்குமப்பூவின் தனிச்சிறப்பும் அதன் மருத்துவ குணமும் !! ( Saffron's specialties & medicinal properties )

Saffron's Specialty & Medicinal properties:

    
    

What Is Saffron?

A spice derived from the flower of Crocus sativus ( scientific name), saffron  is mainly used as a seasoning and coloring agent in food. Apart from its uses, it is also well known for being one of the most expensive spices in the world.   


குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கிறோம். இதன் நிறம்  பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும் . நறுமண முடையதாகவும், சிறிது கசக்கும் தன்மையுடனும்  இருக்கும் . குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் மஞ்சள் நிறம் உண்டாகும். 
 


குங்குமப்பூவை எப்படி பயன்படுத்த வேண்டும் ?
              (How to use this saffron?) 
  • உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
  • சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை, குங்குமப்பூ ஒன்றே போதுமானது . 
  • இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். 
  • நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளை எடுத்து 15 குங்குமப்பூவைச் சேர்த்து அரைக்க வேண்டும் . இதை முகப்பருக்கள் மீது தடவி, அரைமணி நேரம் ஊறி பின்பு முகத்தைக் கழுவ வேண்டும் . வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் பருக்கள் மறைந்துவிடும். மேற்கொண்டு பருக்கள் வராது.

  • முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. 
  • இதயம் மற்றும் மூளைக்கு சக்திதர குங்குமப்பூ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மருந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள்.
  • உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ள வேண்டும் . இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாக தெரியும் .
  • சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள்.  ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு தேவதையாக மாறி விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  • கொஞ்சம் குங்குமப்பூவை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடவும். ஜீரண சக்தி பெருகும். வாய் நாற்றமின்றி மணக்கும்.

  • காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.
  • பத்து குங்குமப்பூ எடுத்து கொள்ளவும்  ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பை அதனுடன் சேர்க்கவும். இரண்டையும் சேர்த்து இரண்டு ஸ்பூன் பாலில் ஊற வைக்க வேண்டும்.  பின்பு அரைத்து அதன் விழுதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள்(Minutes) கழித்து கழுவி விட்டால் முகம் பளிச் என்று ஆகிவிடும்.

  • கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.
  • கர்ப்பிணிகள் எட்டாம் மாதத்திலிருந்து குங்குமப்பூவைச் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்யமாகப் பிறக்கும். இரண்டு குங்குமப்பூவை காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கவும்.
  • வயிற்றில் புண் குணமாக குங்குமப்பூவை நாலை எடுத்து காய்ச்சிய பாலில் சேர்த்து நாற்பது நாட்கள்  குடித்து வரவேண்டும் அப்படி குடித்தால் அல்சர் புண்  ஆறிவிடும்.
  • குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். 

நான்கு முட்டாள்கள் ! அக்பர் & பீர்பால் கதை !!! (Four fools! Akbar & Birbal Story)

 Akbar & Birbal Story


நான்கு முட்டாள்கள் !

(Four Fools)


 ருநாள் என்னவோ தினசரி மிகப் பெரிய அறிவாளிகளையே சந்தித்துக் கொண்டிருந்தது போலவும், அப்படி சந்தித்து சந்தித்து மிகவும் அலுப்புத் தட்டி விட்டது போலவும், டில்லி பாதுஷா அக்பருக்கு இருப்பதிலேயே படு முட்டாள்களை சந்திக்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஒரு நாள் உண்டாகி விட்டது! டில்லி பாதுஷாக்கள் என்றாலே அன்றைக்கும்  சரி இன்றைக்கும் சரி கொஞ்சம் விபரீதமான, வித்தியாசமான, மறை கழன்ற கேசுகள் தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே!
முட்டாள்களை சந்திக்க வேண்டுமென்ற ஆசை வந்தது சரி, அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது?
அக்பர் டில்லி பாதுஷா அல்லவா, உத்தரவு போட்டால் போயிற்று! அத்தனை முட்டாள்களும் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா என்ன?! ஆனாலும் அதில் கடினமான  பகுதி என்னவென்றால், இருப்பதிலேயே வடிகட்டின முட்டாள்களாகப் பார்த்து அதில் நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! அதற்கு புத்திசாலித்தனமும், சாதுர்யமும் உள்ள ஒருவர் வேண்டாமா!
"கூப்பிடு பீர் பாலை!" பாதுஷா அக்பர் காவலருக்கு உத்தரவிட்டார். பீர் பாலும் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.
"பீர்பால்! இருப்பதிலேயே வடிகட்டின முட்டாளிலும் வடிகட்டின முட்டாளாக ஒரு நான்கு பேரைப் பார்க்கவேண்டும்! கண்டு பிடித்து அரசவைக்கு அழைத்து வாரும்!"
"அப்படியே செய்கிறேன் பாதுஷா!" சொல்லி விட்டு பீர் பால் புறப்பட்டு விட்டார்.

போகிற வழியில் தென்படும் மனிதர்களைக் கவனித்துக் கொண்டே பீர்பால் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.முட்டாள்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம்,இருப்பதிலேயே அடிமுட்டாள்களாகப் பொறுக்கிஎடுக்க வேண்டாமா!
எதிரே ஒரு மனிதன், ஒரு திருமணத்திற்கு சீர்வரிசை கொண்டு போவது போல, பரிசுப் பொருட்களை ஊர்வலமாகக் கொண்டுபோவதைப் பார்த்தார். அந்த மனிதனுடைய நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவே அவனை நிறுத்தி விசாரித்தார்.
"ஐயா! எனக்கும் சோனியா  என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. திடீரென்று அந்தப் பெண் என்னுடன் நிச்சயத்தை முறித்துக் கொண்டு வேறொருவனுடன் திருமணம் செய்து கொண்டு விட்டாள். வம்பு வழக்கு,ஏகப்பட்ட ரகளை, பிரச்சினைக்குப் பிறகுதான் திருமணம் நடந்ததாம்.அவளுக்குத் தான் இந்த சீர் வரிசையெல்லாம் எடுத்துப் போகிறேன்." என்று விவரம் சொன்னான் அந்த மனிதன். அவன் யார், அந்த சானியா யார் என்பதையெல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டு, பீர்பால் இவன் அடி முட்டாளிலும் வடிகட்டின முட்டாள் என்று முடிவு செய்தார்.
அடுத்து ஒரு மனிதன்,தலைக்கு மேல் புல்கட்டுச் சுமையைச் சுமந்து கொண்டு சினையாயிருந்த எருமை மீது உட்கார்ந்து கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவனை நிறுத்தி பீர்பால், புல்கட்டை எருமை மீது வைத்துக் கொள்ளாமல் எதற்காகத் தன தலை மீது சுமந்து கொண்டு போகிறான் என்று விசாரித்தார்.
"ஐயா! என்னுடைய எருமை  சினையாயிருக்கிறது! அதன் மேல் புல்கட்டை வைத்துக் கொண்டு போனால், அதற்கு சுமையாக இருக்குமே என்று தான், நான் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு, என்தலைமேல் புல்கட்டைச் சுமந்துகொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். எருமைக்கு பாரம் குறையும் அல்லவா?" என்று பதில் சொன்னானாம். அக்பருக்குக் காட்ட இவனை விட அடிமுட்டாள் வேறு எவனும் கிடைக்க மாட்டான் என்று பீர்பால் முடிவு செய்தார்.
சோனியாவுக்கு சீர்வரிசை கொண்டுபோனவன், எருமைக்கு சுமையைக் குறைக்கிறேன் என்று அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, புல்கட்டை சுமந்து போனவன் ஆக இந்த இரண்டு பேர்வழிகளையும் அழைத்துக் கொண்டு பீர்பால் அக்பரிடம் போனார்.
இரண்டு பேர் கதையையும் கேட்ட அக்பர், பீர்பால் தேர்ந்தெடுத்தது சரிதான் என்று ஒப்புக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துத் தான், தான் சொன்னது நான்கு பேர், பார்த்தது இரண்டைத்தான் என்று அக்பருக்கு உறைத்தது. பாதுஷாக்களாக இருப்பதில் மிகப் பெரிய சிரமம், தாங்கள் என்ன உத்தரவு போட்டோம் என்பதை நினைவு வைத்துக் கொள்வது தான்.
"பீர்பால்! உம்மை நான்கு முட்டாள்களை அல்லவா கண்டு பிடித்துக் கொண்டு வரச் சொன்னேன். மீதி இரண்டு பேர் எங்கே?" என்று கேட்டார் அக்பர்.
"நான்கு முட்டாள்களும்  இங்கேயே இருக்கிறார்கள் பாதுஷா!" என்றார் பீர் பால். அக்பருக்குக் கோபம் வந்து விட்டது. பாதுஷாவாக இருப்பதனால் ஒன்று இரண்டுக்கு மேல் எண்ணத் தெரியாது என்று பீர்பால் நினைத்துவிட்ட்டானா என்ன?
"எங்கே அந்த மீதம் இரண்டு பேர்?"
"இதோ என்னைப் பாருங்கள் பாதுஷா! மூன்றாவதாக நான் இருக்கிறேன்! முட்டாள்களைத் தேடிக் கொண்டு போன என்னை விடப் பெரிய முட்டாள் வேறு எவராவது இருக்க முடியுமா? "
பீர்பால் இப்படித் தன்னையே முட்டாள் என்று சொல்லிக் கொண்டதில் அக்பருக்கு மிகவும் சந்தோஷம்! இத்தனை நாள் இவன் பெரிய புத்தி சாலி, பெரிய சாமர்த்தியக் காரன் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானே கூட இவனைப் பாராட்டி நிறைய சன்மானம் அளித்துப் பாராட்டியிருக்கிறேன். ஆனால், அவனே தன்னை பெரிய முட்டாள் என்று சொல்லிக் கொள்வது கேட்பதற்கே எவ்வளவு சுகமாக இருக்கிறது! புத்தி சாலிகளுக்கு பாதுஷா ஒரு பொருட்டே அல்ல! முட்டாள்கள் இருந்தால் தான் பாதுஷாக்கள் பாதுஷாக்களாக இருக்க முடியும்!
பாதுஷாவின் சந்தோஷம் கொஞ்ச நேரம் நீடித்தது! அப்புறம் வழக்கமாக வருகிற சந்தேகம்வந்து விட்டது! பீர்பால்,கண்ணில் இரண்டைக் காட்டினான், தன்னையே மூன்றாவது முட்டாள் என்று சொல்லிக் கொண்டான். நாலாவது எங்கே?
"பீர்பால்! ஒன்று, இரண்டு, மூன்று! எங்கே அந்த நாலாவது முட்டாள்? இங்கேயே இருப்பதாக வேறு சொல்கிறாய்! என்னை ஏமாற்றுகிறாயா?" அக்பரின் கேள்வியில் கோபம் கொஞ்சம், குழப்பம் கொஞ்சம் கலப்படமாக வந்தது.
பீர்பால் மிகவும் பணிவோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை பாதுஷாவிடம் நீட்டி, "நான்காவது மிகப் பெரிய முட்டாளை இதிலேயே பார்க்கலாம், பாதுஷா!" என்றார்!
கண்ணாடியில் தன்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்ட பாதுஷாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை! மறுபடியும், பீர்பால் தன்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டதும், தான் தோற்றுவிட்டதும் புரிந்தது.
"உருப்படியான வேலைகளை விட்டு விட்டு, முட்டாள்களைத் தேடி அலைந்த நான் பெரிய முட்டாள் என்றால், அப்படி என்னைத் தேட அனுப்பித்தவர்  என்னைவிடப் பெரிய முட்டாளாகத் தான் இருக்க வேண்டும்! இல்லையா பாதுஷா?! ஆக, நான்கு முட்டாள்கள் இங்கேயே இருப்பதாகச் சொன்னது தவறில்லையே!"
அசடு வழிய, பீர்பால் சொல்வதற்குத் தலையாட்டி சிரித்து மழுப்புவதைத் தவிர டில்லி பாதுஷாவுக்கு வேறு வழி தெரியவில்லை!
அக்பர் மனதுக்குள் கருவிக் கொண்டார். பீர்பால் நீ புத்திசாலிதான்! ஆனால், என்றைக்காவது ஒரு நாள், நீ என் முன்னால் மண்டியிட்டுக் கெஞ்சத் தான் போகிறாய்!  அப்படி ஒரு நாள் வராமலா போய்விடும்?
பீர்பால் அக்பரைப் பார்த்துச் சிரித்தது, தன்னுடைய  மனவோட்டத்தைப் புரிந்து கொண்டதால் தான் என்று அக்பருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது. சந்தேகமெல்லாம், இப்போதே அதைக் கேட்கலாமா, வேண்டாமா என்பது தான்!
இப்போது, பாதுஷாவுக்கு அடுத்த குழப்பம் ஆரம்பித்து விட்டது.