New Trend Tamil

Browse all latest informations

Wednesday, July 31, 2019

சுதந்திர இந்தியாவின் மறைக்கபட்ட உண்மை வரலாறு !!! ( The Hidden History of Independent India )

காந்திஜி நினைத்திருந்தால் பகத்சிங் என்னும்   
சுதந்திர போராட்ட  வீரரை காப்பாற்றியிருக்கலாம்...மாறாக 
 
 
 
அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார்.
 

இந்த தேசத்தின் விடுதலையை இப்படித்தான் போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். 


அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள். இதை புரிந்துகொண்ட காந்தி, 
1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் (Karachi) நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார் . 

அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படிதான் பிரிட்டிஷ் அரசிடம்பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருநது காப்பாற்ற வேண்டிவரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.
 
அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை (Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா' ( Mahathma ) என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான்பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.


ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.

வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவதுதான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.
லாகூர்(Lahore)சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதைஅறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல்கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும்ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தைபடித்துக்கொண்டிருந்ததால், நான் ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.
 
அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்!

Sunday, July 28, 2019

காளான் பற்றியும் அதன் பயன்களும் பற்றியும் காண்போம் ! (About the mushroom and its uses )

About the mushroom and its uses
















a
காளான் என்பது மண்ணின் மீது வளரகூடிய  ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம். பல்வேறு நாடுகளிலும் விருப்பப்படும் உணவாக  உள்ளது.   காளான் பலவகை  சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்து விற்பனை செய்வதை பார்க்க முடிகிறது . முன்பு  இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 
காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.



காளான் - மருத்துவ பயன்கள் 

           Medicine uses of Mushrooms 





காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கும்.காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்க உதவுகிறது.  

இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. 
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோயயை குணப்படுத்த பயன்படுகிறது. 
100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. 
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.




Friday, July 26, 2019

முதல் மின்சார ஹூண்டாய் எஸ்.யு.வி கார் - ( First Electric Hyundai SUV car )


India's First Hyundai Electric SUV car 




ந்தியாவின் முதல் மின்சார எஸ்.யு.வி கார் !!!

காற்று மாசை கட்டுப்படுத்துகிற விதம் ஹூண்டாய் (Hyundai) கார் நிறுவனம் தயாரித்துள்ளனர் . ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர் ஓடும் இந்த காரின் சிறப்புகள் .


இந்தியாவின் முதல் மின்சார எஸ்.யு.வி (SUV) காரான கோனாவின் என்ஜின் 134 பிஹெச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்பதால் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 9 புள்ளி 7 விநாடிகளில் எட்டிவிடும். கோனா எலெக்ட்ரிக் காரின் உச்சபட்ச திறன் 201.2 பிஹெச்பி ஆகும். எரிபொருளாகப் பயன்படும் மின்சாரத்தை சேமிக்க ஈக்கோ, ஈக்கோ பிளஸ் - வேகத்தை விரும்புவோருக்கு ஸ்போர்ட்ஸ் என பலவித நிலைகளில் இயங்கும் விதத்தில் இதன் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அழகான வெளிப்புறத் தோற்றம், வலிமையான வடிவமைப்பு, விபத்துகளில் உயிர் காக்க பயன்படும் காற்றுப் பைகள், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற நவீன செல்ஃபோன் செயலிகளை பயன்படுத்தக்கூடிய 
7 (Inch ) இன்ச் தொடு திரையுடனான பொழுதுபோக்கு அம்சங்கள் என்று முழுமையான சொகுசு காராக சந்தைக்கு வந்துள்ளது (Hyundai Kona) கோனா. 



சூப்பர் சார்ஜிங் (Super Charging ) முறையில் கோனா எஸ்யூவி-க்கு 54 நிமிடங்களில் 80% வரையில் சார்ஜ் செய்ய முடியும். 64 கிலோவாட் திறன் கொண்ட லித்தியன் ஐயான் பேட்டரி இதில் உள்ளதால், 100% சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்களை இந்தக் காரில் கடக்கலாம். நிலையாக ஓரிடத்தில் பொருத்தக் கூடியது மற்றும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லத்தக்கது என்று 2 விதமான சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன.

இதன் ஆன் போர்ட் சார்ஜரின் செயல்திறன் 7.2 (kilo watt) கிலோ வாட்.
 சிசிஎஸ் டைப் 2 (Combined Charging System-type 2) சார்ஜரில் சார்ஜ் செய்தால் முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை ஆகிறது . டி.சி ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தினால் 57 நிமிடங்களில் 80% வரையில் சார்ஜ் செய்ய முடியும். 


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் குறிப்பிட்ட பங்குகளில் (India oil Petrol Bunk) ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கோனா காரின் (Hyundai Kona Car) பேட்டரிக்கு 3 ஆண்டுகளும், ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது.

5 (5 Colors ) வண்ணங்களில் விற்பனைக்கு வரும் இந்த கார் இந்திய சந்தையில் மத்திய அரசின் வரி நீங்கலாக 25 லட்சத்து 30 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




காற்று மாசுபாட்டை முழுவதுமாக குறைக்கும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. துளிகூட மாசு ஏற்படுத்தாமல் பயணம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் இது பாதிக்காது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக கோனா (Hyundai Kona)இருக்கும் என்பதில் மாற்று கருத்தே 
இல்லை.





மத்திய பட்ஜெட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கோனா கார் விற்பனைக்கு வருவதால்,வரிச்சலுகைகளுக்காகவும்  குறைந்த மின்சாரத்தில் அதிகதூர பயணம் செய்யும் வசதிக்காகவும் மக்கள் இதனை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






இன்று வரை இந்திய வாகன சந்தையில் வேறு எந்த மின்சார எஸ்.யூ.வி.(SUV) ரக கார்களும் இல்லை என்பதால் இதனுடைய செயல்திறனை வேறு கார்களோடு  ஒப்பிட வாய்ப்பு இல்லை. அதே நேரம் எலக்ட்ரிக் கார்களின் (Electric Car) சந்தை எதிர்காலத்தில் அதிக போட்டி உடையதாக மாறும் என்பது உறுதியாக  தெரிகிறது .

Thursday, July 25, 2019

கூகிள் பற்றி தெரியாதவை !! தெரிந்துகொள்வோம் - (Unknown details about Google )

Unknown Details About Google

Image result for google



அமெரிக்காவில் கூகுள்- (Google) இன்று  தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளிலும்  தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் (Google) நிறுவனம், மிகப்பெரும் முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் (Digital) கட்டமைப்பினையும் கொண்டதாகும். முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்

கூகுள் (Google) தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் ஆல்டா விஸ்டா (AltaVista), ஹாட்பாட் (Hotbot) ஆகிய  (Searh Engine) தளங்கள் 1995 பெரிய அளவில் வளர்ந்து இருந்தன. ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இணையத் தேடலில் மிகத் துல்லியமான முடிவுகளையே கொண்டு வர வேண்டும் என்பதையே தன் இலக்காக, கூகுள் நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 



யாஹூ தவிர, இந்தப் பிரிவில் செயல்பட்டு வந்த அனைத்து தேடல் சாதன நிறுவனங்களும் கீழே விழுந்துவிட்டன என்பதே உண்மை, இதன் வளர்ச்சியைக் கண்ட மைக்ரோசாப்ட் (Microsoft), தன் பிங் (Bing) தேடல் சாதனத்தினை கூகுளுக்குப் போட்டியாக நிறுவியது.

Google Ads




பணம் சம்பாதிக்கும் வகையில், கூகுள், தன் AdWords என்ற வசதியினை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தேடப்படும் பொருளின் இணைய தளங்கள் முகவரி அருகே, அந்த தேடல் சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை மேற்கொள்ளலாம். அதிசயத்தக்க வகையில், இந்த விளம்பரங்களில் கிளிக் செய்து, பலர் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்க விருப்பபட்டனர் . கூகுள் (google) மற்றும் விளம்பரம் தந்த நிறுவனம் ஆகிய இரண்டும் இதனால் பயன்பெற்றன கோடிகோடியாய் சம்பாதித்தன. இப்படியே படிப்படியாக உயர்ந்து கூகுள், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையை அடைந்தது. 

உலகின் அனைத்து தகவல்களும் கூகுளின் திரையெங்கும் காட்சிஅளிக்கின்றன. ஆனால், கூகுள் இதற்கும் மேலாக சிந்திக்கத் தொடங்கி இணைய சேவைகளை வழங்குகிறது

உலகில் உள்ள அனைத்து டேட்டாவினையும் தரம் பிரித்துத் தருவது பெரிதல்ல, இவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் மனித வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என கூகுள் நிறுவனர் லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.

Google Adsense





கடந்த பல ஆண்டுகளாக நடந்த பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, கூகுள் நிறுவனத்தின் Adsense ல் தமிழுக்கு அதிகாரப்பூர்வ மொழி என்ற அங்கிகாரம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு  அதாவது 2018 பிப்ரவரி 9ம் தேதியன்று, இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இனி, ஹிந்தி, பெங்காலி, தமிழ் மூன்றும் Adsense ல் ஏற்கப்பட்ட இந்திய மொழிகள் என அங்கிகாரம்   பெற்றன.  ஆன்லைனில் (Online) பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் எவ்வாறு என்று தெரிவதில்லை. கூகிள் Adsense பற்றி அறிந்தவர்கள் வெற்றி பெற்றும் இருக்கிறார்கள். 
கூகுள் என்றவுடன் நமக்கு அதன் தேடல் சாதனமான 



கூகுள் சர்ச் -(Google Search) 








 ஜிமெயில்-(Gmail)          



                           





கூகுள் மேப்ஸ் - (Google Maps)


கூகுள் அசிஸ்டன்ட்  ( Google Assistant)











 கூகுள் நிறுவனம், தற்போது ஹார்டுவேர் தயாரிப்பிலும் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் அளித்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆப்பான 'கூகிள் நவ்'-வின் குறைபாடே அது இருவழி உரையாடலை மேற்கொள்ள இயலாது என்பதுதான். ஆனால் இந்த புதிய விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்டிடம் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு தகுந்த பதில்களை பெறவியலும்.
எடுத்துக்காட்டாக,
தமிழ்நாட்டில் இந்தாண்டு எப்போது பருவமழை துவங்கும்? என்று  கேட்டால்,
அதற்குரிய தகுந்த பதிலை அளிக்கும். 
இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம் கூகுளின் அனைத்துலக முகப்புப் பக்கமான கூகுள் டாட் காமை உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது.

கூகுள் பே  (Google Pay)





கூகுள் பே (Google Pay) என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு  பணம் அனுப்பும் செயலி  ஆகும். செல்லிடத் தொலைபேசி , ஆண்ட்ராய்டு, கைக் கணினி போன்ற கருவிகளின் வலைத்தளம் வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் இது பயன்படுகிறது. ஜனவரி 8,2018 இல் கூகுள் நிறுவனம் அதனுடைய பழைய பணம் செலுத்தும் முறைகளான ஆண்ட்ராய் பே (Android Pay) மற்றும் கூகுள் வாலட் (Google Wallet) போன்றவற்றை ஒருங்கிணைத்து கூகுள் பே என அறிவித்தது. 

ஆண்ட்ராய்டு பே என்பது கூகுள் பே (Google Pay) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இது கூகிள் குரோமினுடைய தானாகவே நிரப்பிக் கொள்லும் வசதியையும் கொண்டுள்ளது. இந்தச் செயலியில் ஆண்ட்ராய்டு பே மற்றும் கூகுள் வாலட் போன்ற செயலிகளிலிருந்த பணம் செலுத்தும் மற்றும் பணம் பெறுவதற்கு வேண்டுதல் அனுப்புதல் ஆகிய வசதிகளும் இதில் உள்ளது.




இதன் குரோம் பிரவுசர்(Chrome Browser) இன்று தொடர்ந்து தன் பயன்பாட்டினைப் பெருக்கி வருகிறது. உலக அளவில், இன்று 80 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட், கூகுள் நிறுவனத்தினுடையதுதான். கூகுள் இணைய தொடர்பான சேவைகளை மட்டுமே கொண்டு வருகிறது என யாராவது எண்ணினால், அது அறியாமையாகும். 

ரோபோடிக்ஸ் எனப்படும் மனிதர்களைப் போல செயல்படும் ரோபோ என்னும் இயந்திரத் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயர் கல்விப் பிரிவுகள் வழங்கல், மருத்துவத் துறையில் சோதனைகள் என்பவை எல்லாம், கூகுள் நிறுவனத்தின் ஒரு சில சேவைத் தளங்களே.  இன்னும் பல செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் பொதுவானது, இவை சார்ந்த டேட்டா வளம் மட்டுமே. 


இந்த உலகளாவிய தகவல்களுடன், எதிர்பாராமல் குவிந்த செல்வமும், கூகுள் நிறுவனத்தை உலகின் தற்போதைய வாழ்வியல் வழிகளையும் செயல் மையங்களையும் மாற்றி அமைக்கும் சக்தியை கூகுள் நிறுவனத்திற்குத் தரலாம்.

Image result for google


அவ்வாறு உருவாகும்போது, கூகுள் அவை அனைத்தினையும் கட்டுப்படுத்தி வழி நடத்தும் சக்தியோடு இயங்கலாம்.


இவ்வாறு ஒரு நிறுவனத்திடம், மனித வாழ்க்கையின் அனைத்து முக்கிய செயல்பிரிவுகளின் கட்டுப்பாட்டினைத் தரலாமா? எனப் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். 





குறிப்பாக Google Earth சிறப்பான செயல்பாடுகள் பல நன்மைகளைத் தொடர்ந்து தந்து வருகின்றன. நம் விண்வெளி குறித்து கூகுள் அவ்வப்போது அப்டேட் செய்து தரும் தகவல்கள் பல வழிகளில் பயனுள்ளதாய் இருக்கின்றன.
ஆனால், அதே சமயத்தில், ஜிமெயில் வழியாக, கூகுள் சர்ச் தளம் வழியாக, நம்மைப் பற்றிய, நாம் ஆர்வம் கொள்ளும் பொருட்கள் பற்றிய, நம் ஆசைகள், வெறுப்புகள் போன்ற அனைத்தையும் கூகுள் ஒவ்வொருவருக்குமாகத் தனித்தனியே சேமித்து வைக்கிறது. ஆனால், இப்போது கூகுள் மட்டுமின்றி, யாஹூ போன்ற தளங்களும் இதே போல நம் விருப்பு வெறுப்புகளைப் தன்னிடம் சேமித்தே வைக்கின்றன.


Image result for google server room


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.பி.எம். IBM நிறுவனம் மட்டுமே கம்ப்யூட்டர் சாதனத்தை கை கொண்டதாக இருக்கும் நிலை ஒன்று ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லேப்டாப் - (Laptop ), டேப்ளட்- (Tablet) எனப் பலவகை கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

அதே போல, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் மட்டுமே தன்னாட்சி புரியும் நிலை ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லினக்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன


Image result for google office interior




இன்றைய பொறாமை கலந்த போட்டி, டேட்டாவினைக் கைப்பற்றுவதில் உள்ளது. ஒரே ஒரு நிறுவனம், அனைத்து டேட்டாவினையும், அறிவு சார் தகவல்களையும், நூல்களையும் தன்னிடத்தே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? இது போல டேட்டாவினை எடுத்து தன்னகத்தே ஒரு நிறுவனம் வைப்பதனை, அரசுகள் தடுக்க, கண்டிக்க அல்லது வரையறை செய்திட வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Image result for google headquarters\



இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் அனைத்து நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. இல்லை என்றால், இப்போது கூகுள் உருவாக்கி வரும் வளமான, திடமான டிஜிட்டல் கட்டமைப்பும், அதனிடம் தொடர்ந்து குவியும் செல்வமும், அந்நிறுவனத்தை எந்த அரசும் தட்டிக் கேட்க முடியாத இடத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.


இதுதான்  இன்றைய கூகுளின் வளர்ந்த நிலை...

Wednesday, July 24, 2019

கழுதையிடமிருந்து ஒரு பாடம்! - A lesson from the donkey

A lesson from the donkey

ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களிடம் உலகின் எதார்த்தங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சீடர்களுள் ஒருவன், "குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும் தாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? இந்த குணம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று கேட்டான்.
அதற்கு அந்த குரு "கழுதையிடமிருந்து தான்..." என்று உடனே கூறினார். உடனே அனைத்து சீடர்களும் "என்ன கழுதையிடமிருந்தா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.
"ஆமாம், அதனிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். நீங்கள் கழுதையை கூர்ந்து கவனித்ததில்லையா? காலையில் அது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும். மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து செல்லும் தானே! அதை வைத்து தான்" என்று சொன்னார்.
அப்போது மற்றவன் "இதில் என்ன குருவே இருக்கிறது, நீங்கள் அதனிடம் கற்று கொள்வதற்கு" என்று கேட்டான். அதற்கு குரு "ஆமாம், அது அழுக்கு துணிகளை சுமக்கும் போது வருத்தப்படுவதும் இல்லை, சுத்தமான துணிகளை சுமக்கும் போது மகிழ்வதும் இல்லை. அதைத் தான் கற்றுக் கொண்டேன்" என்று கூறினார்.

Tuesday, July 23, 2019

சுற்றுலா செல்ல அருமையான இடம் கேரளாவில் உள்ள வயநாடு (கேரளா ) - Amazing Tourist Place Wayanad

Amazing Place of Wayanad,Kerala




கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த 1980ம் ஆண்டு வயநாடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவையாகும். இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் நிறைய உள்ளன.




கேரளாவில் வற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டம் வயநாடு. இந்த மாவட்டத்தின் முக்கால்வாசி இடம் வனப்பகுதி என்பதால் இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வயநாடு, தமிழக மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் மைசூர் அருகே அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு. இயற்கை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க வயநாடுதான்


குருவா தீவு : (Kuruvadweep)


இயற்கை விரும்பிகளின் மிதக்கும் சொர்க்கபுரியாகத் திகழும் குருவா தீவு, கபினி ஆற்றையொட்டி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகான வனப்பகுதி. அரியவகை பறவைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆபூர்வ மூலிகைகளும் உள்ளன.

முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்: 

( Muthanga wildlife sanctuary, wayanad)



சுல்தான் பத்தேரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் போன்றவை இங்கு உள்ளன. வனத்துறையினர் ஆற்றோரமாக யானைச் சவாரியையும் நடத்தி வருகின்றனர்.

இவை தவிர அம்புக்குத்தி மலையடிவாரத்தில் உள்ள முனியறா, வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், கொட்டமுண்டா கிளாஸ் டெம்பிள், கோரோம் மசூதி, திருநெல்லி கோவில், பழசிராஜா டாம்ப் உள்ளிட்ட பார்க்கத் தகுந்த பல இடங்கள் உள்ளன.

செம்ப்ரா உச்சி: Chembra Peak)




கல்பெற்றாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது செம்ப்ரா உச்சி என்ற செம்ப்ராமலை முகடு. கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை உச்சிதான் வயநாட்டின் உயரமான மலை உச்சி ஆகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடம்.




கரலாட் ஏரி  : (Karalad Lake)



வயநாடு (Adventure Camp) சாகச முகாம் கரலாட் ஏரி வயநாட்டின் தாரியோடில் அமைந்துள்ளது. இது கேரளாவின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியாகவும், பூக்கோடு ஏரிக்குப் பிறகு வயநாட்டின் இரண்டாவது பெரிய ஏரியாகவும் உள்ளது. இந்த ஏரி பனசுரா சாகர் அணையில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. 


கரலாட் ஏரி கல்பெற்றாவில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அழகிய சோலைகளால் அலங்கரிக்கப்பட்ட கரலாட் ஏரியில் படகுச் சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியில் தூண்டில் போட்டு மீன்பிடித்தும் பொழுது போக்கலாம்.

சூச்சிபாரா நீர்வீழ்ச்சி: (Soochipara Waterfalls)


 100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராக கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், கண்களைக் கொள்ளை கொள்ளும். அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழலாம். இதே போல மேப்பாடிக்கு அருகே வெள்ளரிமலா கிராமத்தில் அமைந்துள்ள சென்டினல் ராக் அருவியும் பிரபலமானது. வயநாட்டுக்கு அருவிகளும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. மேப்பாடிக்கு அருகே உள்ள சிப்பாரா அருவி காண்போரை பரவசப்படுத்துவதோடு ஆச்சரியப்படுத்தவும் வைக்கிறது.

பேகுர் வனவிலங்கு சரணாலயம் : (Begur Wildlife Sanctuary)



பேகுர் வனவிலங்கு சரணாலயம் வயநாடு மாவட்டத்தின் பல மறைக்கப்பட்ட ரத்தினங்களில் ஒன்றாகும். பசுமையான மற்றும் அரிதான விலங்கின இனங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக அமைகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் இங்கே ஒரு அற்புதமான சஃபாரிக்கு சரியான பின்னணியை உருவாக்குகின்றன. கரடி, காட்டெருமை, யானைகள், காட்டில் பூனைகள், குரங்குகள், சிறுத்தை, புள்ளிகள் கொண்ட மான், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டு நாய்களின் பொதிகளை இங்கு காணலாம். வயநாட்டில் உள்ள மனந்தாவடிக்கு கிழக்கே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதியில் இயற்கை ஆர்வலர்கள் பல அழகிய சுற்றுலா இடங்களைக் காணலாம். இது ஒரு தனித்துவமான இடமாகும், இது எங்கள் பார்வையாளர்களிடையே மெதுவாக இழுவைப் பெறுகிறது.

மீன்முட்டி அருவி : (Meenmutty Falls, Wayanad)


ஊட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் மீன்முட்டி அருவி,  அழகும், ஆர்ப்பரிப்பும் மீன்முட்டி அருவியின் தனிச்சிறப்பு. விண்முட்டி நிற்கும் மீன்முட்டி அருவியின் அழகு, நம்மை கண்கொட்ட விடாமல் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்.

போக்குவரத்து, உணவு, தங்குமிடம் : (Transport, Food, Hotel)


வயநாட்டில் உணவைப் பொறுத்த வரை நாவிற்கு ருசியான நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை வயநாட்டுக்கு நல்ல ரோடு வசதிகள் உள்ளன. அருகில் உள்ள கோழிக்கோட்டில் ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளன.

கேம்ப் பயர், மரவீடுகள் : ( Camp Fire, Tree House)


இது தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடர்ந்த காட்டுக்குள் கேம்ப் பயர் நடத்தப்படுகிறது. காட்டுக்குள் கொட்டும் பனிக்கு இதமாக, நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தவாறு அந்தப் பகுதியின் கதை சொல்லி ஒருவர் சொல்லும் சுவாரஸ்யமான கதையைக் கேட்டுக் கொண்டே, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்குள் சென்று தூங்கி, காலையில் மேனியை இதமாகத் தொடும் காலை வெயிலுக்கு ஹாய் சொல்லி எழுவது வித்தியாசமான அனுபவம். 



காட்டுக்குள் காலாற நடந்து சென்று இயற்கையை ரசிக்கலாம். மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் தங்கி இயற்கையுடன் ஒன்றிப் போவதும் புதுமை அனுபவமே. இவை வயநாட்டின் ஸ்பெஷல்.